

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு

நாள்: 10.05.2025 (சனிக்கிழமை)
காலை 7:00 மணி
பொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்
பின்பு
கொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து
சஞ்சீவி நகர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்

பின்பு
சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே தொடர்பான சுரங்கப்பாதை அமைப்பு குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆய்வு செய்தார். பிறகு சிறிது நேர ஓய்வுக்கு பின்பு காலை உணவை முடித்துவிட்டு தொடர்ந்து


காலை 10:30 முதல்
திருச்சி காஜாமலை மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக டெல்லி உயர் அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணியை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பார்வையிட்டார்.

காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை இடைவிடாது பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து உடனுக்குடன் அதை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுநாள் வரை தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பார்த்து வந்த மக்கள் முதன்முறையாக தொகுதி மக்களின் நலன் ஒன்றே தன்னுடைய நலன் என்று
.

எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி தொகுதியில் பம்பரம் போல் சுற்றி சுழன்று வந்து பணிகளை மேற்கொள்வதும் ஆய்வுகளை மேற்கொள்வதும் மக்கள் மத்தியில் துரை வைகோ அவர்களின் இமேஜை உயர்த்தி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.




