படம் தொடங்கியவுடன் நேரடியாக கதைக்குள் போகும் படங்கள் தொடக்கம் முதலே சுவாரஸ்யம் தருபவை. வீர தீர சூராவும் அப்படித்தான் நேரடியாக கதைக்குள் போகிறது…..
ஒரு எளியவனின் புகார் அந்த புகாரை எடுத்த காவல்துறை சரியான தருணத்தில் பகை மீட்ட காத்திருக்கும் எஸ்பி அவரது என்கவுண்டரிலிருந்து தப்பிக்க நினைக்கும் அப்பனும் மகனும் இதற்கிடையில் குடும்பத்திற்காக பழைய வாழ்க்கையை விட்டுவாழும் ஒரு பலசரக்கு கடைகாரன். இந்த நால்வர் இவர்களின் குடும்பம் இவர்களின் முன்கதையில் நடந்த ஒரு சம்பவம் இவர்களின் இன்றைய இரவு இதோடு ஊர் திருவிழா……..

இப்படி ஒரு கதையும் கதைகளமும் கண்டிப்பாக சுவாரஸ்யம்தான் முதல் ஐம்பது நிமிடங்கள் படத்தில் அவ்வளவு சூப்பரா போகும். அந்த இரவில் அவர்கள் கிளங்கு வைக்கும் சீன்லாம் செமயான காட்சிபடுத்துதல் அப்படியே படம் முழுசா ப்ளாஸ்பேக் காட்சி தொடங்கும் வரை இரவின் பதட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்கள்…..
அந்த சம்பவம் அந்த சம்பவம் என்று முதல் ஐம்பது நிமிடம் பேசப்பட்டு ப்ளாஷ்பேக்கிற்குள் வரும் அந்த சம்பவம் அந்த சம்பவம்னு சொல்லாமலயே கடந்து போயிருக்கலாம். யார் திலீப்பன்….? யார் காளி…? யார் கண்ணன்…..? யார் ரவினு….? முழுப்படத்த எடுத்து அந்த சம்பவத்தையே க்ளைமாக்ஸாக வச்சி அவுங்களுக்கு நன்றி சொல்லிருனு காளி எழுந்து போற சீன்ல நன்றி கார்ட் போட்டு இந்த படத்திற்கான் ப்ரீக்வல் எடுத்திருக்கலாம். ஆனா அப்படி செஞ்சிருந்தா இது கைதியோடு நேரடியாக ஒப்பீடவேண்டிய படமாக மாறியிருக்கும் அதனால சம்பவத்த ப்ளாஸ்பேக்குல வச்சேயாகணும்னு முடிவு பண்ணிருக்கார் இயக்குனர்……..
ஆனா அத வச்ச இடம்தான் படத்திற்கான மைனஸ் ஒரு ப்ளாஷ்பேக்க ஓப்பண் பண்ணி அத பாதிலயே உட்டு மொக்கயான இடத்துல இண்டெர்வல் விடுவது வித்யாசமா இருக்கலாம் ஆனா அந்த இடத்துலயே ஆடியன்ஸோட சுவாரஸ்யம் கட்டாகி பச்சுனு ஆயிரும். இரண்டாம் பாதில என்ன செஞ்சும் முதல் பாதில வந்த அந்த டென்சன திருப்பி புடிக்க முடியல. எனக்கு பின்னாடி இருந்த ஒருவர் கொட்டாவி விட்டாரு இரண்டாம் பாதில அந்தளவு லேகிங் உண்டு சில இடங்களில்…………
நிறைய நல்ல சீக்வென்ஸ் முதல் பாதியின் முதல் ஐம்பது நிமிடம் இரண்டாம் பாதியில் கண்ணன் காளிய ஜீப்பில் இருந்து இறக்கி விட்ட இடத்திலிருந்து கிளங்கு வெடிக்கிற சீன் வரை படத்தின் நிறைய நல்ல சீன்கள் உண்டு……
ஆனாலும் படத்தை ஒட்டுமொத்தமாக சூப்பர்னு சொல்லமுடியாது ஒரு முறை பார்க்கலாம் வகைதான். விக்ரம் கடைசியாக நல்லபடம் எப்போது நடித்தார் என்று சரியாக நினைவில்லை அந்த வகையில் இத பாக்கலாம் வகை படம்தான்……….