
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் சனிக்கிழமை 05.04.2025 4 நகர பேருந்துகள் மற்றும் 6 புறநகர் பேருந்துகள் என மொத்தம் பத்து பி எஸ்- வி இரக புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தீரன் நகர் கிளை சார்பில் திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் நான்கு நகர பேருந்துகளையும் திருச்சிராப்பள்ளி புறநகர் கிளையின் சார்பில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை வரை செல்லும் இரண்டு பேருந்துகளையும் திருச்சிராப்பள்ளி புறநகர் கிளை சார்பில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சேலம் வரை செல்லும் ஒரு பேருந்தையும் கண்ட்ரோல்மென்ட் கிளை சார்பில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் மூன்று பேருந்துகள் என மொத்தம் பத்து பேருந்துகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு அன்பழகன் அவர்கள் மாநகராட்சி ஆணையர் திரு வே சரவணன் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி மண்டல பொறியாளர் திரு அ முத்துகிருஷ்ணன் அவர்கள் போக்குவரத்து துறை அலுவலர் மற்றும் பணியாளர்கள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
