
திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையில் அறநிலையத்துறை இடத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதால் பத்தாவது வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியர்களை அவர்களது தகுதியிலிருந்து கீழ் நிலைக்கு அனுப்பி, பாடம் நடத்த சொல்லி அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகிறது.
தற்பொழுது வந்த 10வது தேர்வு முடிவில் 01மாணவன் கணித தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, அதனால் பத்தாவது எடுத்து வந்த ஆசிரியருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அவர் கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுப்பப்பட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியர் மட்டுமல்லாது மற்ற பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள், என்று பள்ளி ஆசிரியர்கள் குமுறுகிறார்கள்.

பொதுவாக எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்புகளின் எண்ணிக்கை குரூப்புகளின் எண்ணிக்கையை அதிகம் ஆக்குவதற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்குவதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கும்தான் முயல்வார்கள். ஆனால் இந்த காவிரி ஆற்றங்கரை தனியார் பள்ளி 11ஆம் வகுப்பில் ஒரு குரூப்பை மூடி விட்டார்கள். இதனால் அந்த பள்ளிக்கு 200 மாணவர்கள் குறைவாக வருவார்கள்.
பள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி உடைய மாணவர்கள் வர வேண்டாம் என்பதை கருத்தில் கொண்டு vocational என்ற தொழிற்சாலை படிப்பை தரும் ஒரு குரூப்பை மூடிவிட்டார்கள். கடந்த இரண்டு வருடமாக இந்த குரூப் அந்த பள்ளியில் 11வது மற்றும் 12ஆவது வகுப்புகளில் இல்லை. கேள்வி கேட்பார் யாரும் இல்லை என நினைக்கிறார்கள் பள்ளி நிர்வாகம். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தகுதியுடைய , குறைவாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.
கிராமப்புறங்களில், அந்தப் பள்ளிக்கு அக்கம் பக்கத்தில் உள்ள மாணவர்கள் தற்பொழுது vocational குரூப்பில் சேருவதற்கு, நீண்ட தூரம் பயணித்து பள்ளியை அடைய வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
அதேபோல் இந்த பள்ளி நிர்வாகம் , பத்தாம் வகுப்பில் படிப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் மற்றும் ஒருவேளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போகலாம் என்று ஆசிரியர்களால் அடையாளம் காணப்படும் மாணவர்களை ஏதாவது காரணம் காட்டி டிசி கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பி விடுகிறது. இதே போல் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்களையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி பள்ளியை விட்டு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுஅந்த பள்ளியில் தொற்று தொட்டு நடந்து வருவதாக கேள்வி கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் ஒன்பதாவது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கிட்டத்தட்ட 20 பேர் இங்கனம் அந்த பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வரும் நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமழி அவர்களும் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும், அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை குறிக்கோளாக் கொண்டு பல அரிய திட்டங்களை கொண்டு வருகின்றனர் , எந்த ஒரு மாணவனும் பள்ளியில் இடைநிறுத்தல் செய்யப்படக்கூடாது அனைவரும் படித்து பாஸ் ஆக வேண்டும் நோக்கத்தை குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால் இந்த தனியார் பள்ளியோ பத்தாம் வகுப்பு தேர்வில் 100% விழுக்காடு பெற வேண்டும் என்பதற்காக மாணவர்களை பள்ளியை விட்டு நீக்குகிறது, இடைநிறுத்தல் செய்கிறது.
அங்கனம் இந்த கல்வி ஆண்டு ஜூன் 2ம் தேதி பள்ளி துவங்கப்பட்ட பொழுது ஒரு ஏழை மாணவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4-5 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை, உடல்நிலை தேர்ச்சி பெற்று மருத்துவச் சான்றிதழ் உடன் பள்ளிக்கு வந்த அந்த ஏழை மாணவனை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கி விட்டது, நீ டீசி வாங்கிக்கொண்டு வேற பள்ளிக்கு சென்று விடு என்று கூறிவிட்டனர். அந்த பெற்றோர்களும் கெஞ்சி கூத்தாடி மன்றாடி பார்த்தனர் ஆனால் பள்ளி நிர்வாகம் மனம் இறங்குவதாக தெரியவில்லை.
மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் என அனைவரையும் அணுகி மனு கொடுத்தனர், அந்த மாணவனின் பெற்றோர்கள், ஆனால் 10 நாட்களாக அந்த மாணவனை பள்ளியில் சேர்க்காமல் திண்டாட வைத்தது பள்ளி நிர்வாகம். தங்கள் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை தங்கள் பையனின் டிசியை வாங்கிக் கொண்டு செல்லுங்கள் இன்று தெளிவாக கூறிவிட்டனர்,பள்ளி நிர்வாகம்
இந்த மாணவனின் அவல நிலை சைட்லைன் அமைப்பிற்கு 1098 தொலைபேசி எண்ணில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைல்ட் லைன் மற்றும் தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத்துறை -திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு அந்த மாணவனை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
CHILDLINE 1098 என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு சேவையாகும் . சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன் என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பாகும் (NGO), இது துன்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக சைல்டுலைன் என்ற தொலைபேசி உதவி எண்ணை இயக்குகிறது. இது இந்தியாவின் முதல் 24 மணி நேர, கட்டணமில்லா , குழந்தைகளுக்கான தொலைபேசி தொடர்பு சேவையாகும் .சைல்டுலைன் 1098 சேவை இந்தியா முழுவதும் கிடைக்கிறது. இது 602+ மாவட்டங்களிலும், 144+ ரயில் நிலையங்களிலும் , 11 பேருந்து முனையங்களிலும் குழந்தை உதவி மையங்கள் உள்ளன.
0 முதல் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக CHILDLINE செயல்படுகிறது. இது துன்பத்தில் உள்ள குழந்தைகளை மீட்டு உதவுவதற்கான ஒரு முயற்சியாகும். அவர்களின் குறிப்பிட்ட கவனம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் அனைத்து குழந்தைகளிலும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளிலும் இதில் அடங்கும்.