
திருச்சியின் பிரபல தொழிலதிபரும் சமூக ஆர்வலரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவின் துணைத் தலைவருமாக இருந்த ஏ ஆர் பாஷா பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தும் முற்றிலுமாக விலகி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.


அதன் பிரதிபலிப்பாக இன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நடைபெற்ற வக்ப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தன்னுடைய எழுச்சி உரையை நிகழ்த்தினார்.

அப்பொழுது அவர் நம்மிடையே பேசும் பொழுது பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்களை தங்களுடைய பகடை காய்களாக பயன்படுத்துவதாகவும் என்றைக்குமே பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது என்றும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜயை முதல்வராக்குவது தன்னுடைய லட்சியம் என்றும் அவர் கூறினார்.
