New Trichy Times

Current Date and Time
Loading...

கடைசி நாளிலும் ராகினியின் கதக்களி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு பராய்த்துறை நாதர் சுவாமி, முனிவர்களின் செருக்கை பிச்சாடனாராக வந்து அடக்கினார் என்பது தல வரலாறு. இது கலியுகத்திலும் தற்பொழுது நடந்துள்ளது. திருப்பராய்த்துறையில். உண்மையாகிறது. செயல் அலுவலராக மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படும் அகிலாவை அனுப்பி, ராகினியின் அகந்தையை அடக்கி, தனக்கு பல வருடமாக சேவை செய்து வந்துள்ள மக்களுக்கு வாடகை ரசீது கிடைக்க செய்துள்ளார் பராய்த்துரைநாதர் சுவாமி,

மின் இணைப்பு வழங்குவதற்கு ஆவண செய்வதற்கு மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

திருப்பராய்த்துறை கிராமம் அம்பேத்கார் நகர் எக்ஸ்டென்ஸ்னில் 15 வருடம் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையின் உத்தரவு ஒரு நிம்மதி பெரும் மூச்சாக இருந்தது , அதன் பிறகு அடிப்படை வசதிகளுக்கும், மின் இணைப்புக்கும் பணம் கட்டி விட்டு காத்திருந்தார்கள். ஆனால் திருக்கோயில் செயல் அலுவலர் ராகினியோ March மாதம் முடிவதற்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்காமல் அவர்கள் நிலையை பற்றி கேட்காமல் , மின் இணைப்பு செய்யும் வேலையை நிறுத்துவதற்கு மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதிவிட்டார், அதையும் உடனடியாக செயல்படுத்தி விட்டார், அந்த கடிதத்தின் தன்மையைப் பற்றி அறியாத உதவி
மின்பொறியாளர்.

ஆனால் இதே ஊரில் ஒரு தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிறுவனம் ஆறு மும்முனை மின்சார இணைப்புகளை திருக்கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து பெற்றுள்ளது, அது சம்பந்தமாக இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே இடத்தில் 15 வருடமாக மின் இணைப்பு இன்றி வாழும் நந்தவன மக்களுக்கு அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியும் அடிமனை வாடகை ரசீது வழங்குவதற்கு ராகினி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ராகினி கிடைத்த காசோலை வங்கியில் செலுத்தவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை பணம் கட்டியதற்கான ரசீது கொடுக்கவில்லை. மக்கள் காசோலை மூலமாக கொடுத்த வாடகை பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் பொழுதும் விதவிதமாக பதில் கொடுத்து துன்புறுத்தியுள்ளார். சான்றாக, கடிதம் வரவில்லை, நாங்கள் பெறவில்லை, எனக்கு தெரியாது சுப்பிரமணியை பாருங்கள், இரண்டு நாள் கழித்து வாருங்கள்.

அரசு தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்களைத் தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை தெரிவித்தார் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, உடனடியாக உத்தரவு பறந்தது சென்னையில் இருந்து, அதே நேரத்தில் மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படும் திருமதி அகிலா அவர்களும் திருக்கோயில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு பணியை ஏற்றுக்கொண்டார், ராகினி அவர்களிடமிருந்து. இணை ஆணையர் திருமதி கல்யாணி அவர்களின் உத்தரவுப்படி உடனே அனைவருக்கும் உரிய ரசீது வழங்கப்பட்டு பணம் வங்கிக்கு அனுப்பப்பட்டது. மின் இணைப்பு வழங்குவதற்கு ஆவண செய்வதற்கு மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

திருக்கோயில் உள்ள ராகினியின் வளர்ப்புகள் செயல் அலுவலர் அகிலா அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை இருந்தாலும் உடனிருந்து இரவு 8:30 மணி அளவில் அனைத்து பணியையும் முடித்துவிட்டு அனைவருக்கும் ரசீது பிரிண்ட் எடுத்த உடனேயே அலுவலகம் மூடப்பட்டது.

ராகிணி யின் சில பராக்கிரம சாதனைகள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோயிலின் செயல் அலுவலர் ராகிணி அவர்கள், சிவனடியார்களுக்கு உழவாரப்பணி செய்ய தடை விதிப்பார், இவர் எம்எல்ஏ வை கண்டு கொள்ள மாட்டார், திருக்கோயிலில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி தர மாட்டார், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி தர மாட்டார், ராகிணி ரிஜிஸ்டர் போஸ்ட்களை பெற மறுப்பார் & திருப்பி அனுப்பி விடுவார், உயர்நீதிமன்ற கோர்ட்டு உத்தரவை மதிக்க மாட்டார் அதை நடைமுறைப்படுத்த மாட்டார். பணக்காரர்கள் கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களை ஆக்கிரமிப்பு இல்லை என்று சொல்வார் அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டி க்கு ஒரு சட்டம் என செயல்படுபவர். மக்கள் ரசீது கேட்டால் கொடுக்காமல் அலைக்கழிப்பார். இன்னும் இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். ராகினி ஏற்கனவே பணிபுரிந்த கல்லுக்குழி விநாயகர் கோயிலிலும் பல பல சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக செயல்படும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அறநிலையத்துறையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் சேகர்பாபு, மற்றும் களத்திலே மக்களுடன் மக்களாக சேவை செய்து வரும் பல அதிகாரிகள் உள்ள போது ராகினி போன்றவர்கள் அவர்கள் எல்லோருக்கும் களங்கம் விளைவிப்பது போல் செய்கிறார். சிவனடியார்களோ சிவபெருமான் தான் இவருக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD