
திருப்பூர், ஏப். 23-
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை இந்து முன் னணி வன்மையாக கண்டிக்கிறது. திமுகவின் இந்து விரோதப் போக்கையே அமைச்சரின் பதில் வெளிப் படுத்துகிறது.
அன்னதானம் செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு துறையின் தரச்சான்று பெற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் அரசு கூறியது. தி.மலை உட்பட பல இடங்களில் அன்னதானம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். கோயில் விழாக்களில் பிற மதத்தின் குளிர்பானங்கள் வழங் கும்போது, அதை மதநல்லிணக்கம் என்று அரசு விளம்பரப்படுத்தி பாராட்டுவது ஏன்?
சென்னையில் பிரபல ஓட்டலில் பிரியாணி சாப் பிட்டு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விசாரிக்கச் சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரி, பாதியில் திரும்பினார். இதுதொடர்பாக சமூக வலைத் தளத்தில் கருத்துத் தெரிவித்த, இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெகன் மீது வழக் குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாமல் கோயில் அன்னதானத்தின் மீது அமைச்சர் நேரு குற்றம் சுமத் தியுள்ளார். அவர் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்பது மக்கள் கேள்வியாகும். கோயி லுக்கு வந்தவர்களுக்கு அங்கு தரப்பட்ட உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என் பதை எதன் அடிப்படையில் அமைச்சர் தெரிவித்தார்!
அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதியில் நக ராட்சி குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்வதாக அமைச்சர் கூறுகிறார். குடிநீரில் கழிவுநீர் கலக்காவிட்டால், நீர் வினியோ கத்தை ஏன் நிறுத்த வேண்டும்? தெய்வ நம்பிக்கை கொண்ட அமைச்சர் நேரு, இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டிக்கிறோம். மக்கன் பாதிக்கப்பட் டதற்கு வெக்காளியம்மன் கோயிலின் அன்னதான மாக இருக்கலாம் என்ற தன் கருத்தை அவர் திரும் பப் பெற வேண்டும். அந்தக் கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகரிடம் முறையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி