
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் எங்கள் இனிய நண்பர் திரு.எம்.குமரவேல் அவர்களின் தாயார் திருமதி.எம்.கமலா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார் என்கின்ற செய்தியை அறிந்து சொல்லனா துயரம் கொண்டோம். தாயாரை இழந்து வாடும் அன்பு நண்பர் திரு.குமரவேல் அவர்களுக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ஒரு சகோதரனாக என்றும் உங்களோடு உற்ற துணையாக நிற்போம் என்று உறுதி கூறுகின்றோம். அன்னையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி