New Trichy Times

Current Date and Time
Loading...

வாரிசு அரசியல்……………

திமுக வின் வாரிசு அரசியலை எதிர்த்து தனியாக களம் கண்டார் வைகோ அவரகள்.

ஆனால் காலம் அவர் மகனை அரசியல் சுழலில் இழுத்தது.

வாரிசு அரசியல்…….. எந்த துறையில் இல்லை?

அந்த வாரிசு தகுதியானவரா என்பது முக்கியம்.

இங்கு பல வாரிசுகள் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் உதயமாகி பின் டம்மி ஆக நிற்கின்றனர்.

திரைத்துறையில் தொடங்கி அரசியல் வரை அநேக உதயங்களை கூறலாம்.

தகுதி திறமை இல்லாத வாரிசுகள் மக்கள் மன்றங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

துரை வைகோ அந்த ரகம் அல்ல என்பதை பல வழிகளில் நிரூபித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் இவர் திருச்சி தொகுதியில் வேட்பாளர் ஆக களம் இறங்கிய போது திமுக வின் நகலாகதான் பார்த்தேன். அவர் மேல் பெரிய ஈர்ப்பு வரவில்லை. சத்தியமாக நான் இவருக்கு வாக்களிக்கவில்லை.

ஆனால்………..

இன்று இவர் தொகுதி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் செயல்களை பார்க்கும் பொது இவருக்கு வாக்களிக்காமல் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என குற்ற உணர்ச்சி எழுகிறது.

மன்னியுங்கள் மாண்புமிகு mp அவர்களே.

இன்று காலை அரசு பணிகளை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் தொகுதி வருகிறார் 7 மணி முதல் ஆய்வு செய்கிறார் செய்தி சேகரிக்க வரவும் என கூறியிருந்தார்கள்.

வழக்கமாக 7 மணி என்றால் அரசியல்வாதிகளின் இலக்கணப்படி 9 மணி என அலட்சியமாக 8 மணிக்கு சென்றேன். கவுன்சிலர் அப்பிஸ் முத்துக்குமாரை அலைபேசியில் அழைத்து mp எப்போது வருவார் என கேட்க அவரோ சார் அவர் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து ஆய்வு முடித்து விட்டு சஞ்சீவி நகர் சென்று விட்டார் என கூறவும் தவறை உணர்ந்து சஞ்சீவி நகருக்கு வாகனத்தை விரட்டினேன். ஆனால் நாள் செல்வதற்குள் அவர் அங்கு முடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறார் என அறிந்தேன். வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமே என வருத்தப்பட்டு நிற்கயில் அவரின் வாகனம் எதிரே வருகிறது. நான் அவரை பார்த்து வணக்கம் வைக்கும் முபாக என் அருகே நின்ற வாகனத்தில் இருந்து அவர் என்னை நோக்கி வணக்கம் கூறி சகஜமாக பேச தொடங்கினார்.

நான் அவரிடம் மன்னிக்கவும் தாமதம் ஆகி விட்டது என கூறும்போது பரவாயில்லை சார் நீங்கள் cm ப்ரோக்ராம் அலைச்சல் காரணமாக தாமதம் ஆகியிருக்கும் மாலை செய்தியாளர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி விட்டு வணக்கம் கூறி சென்றார்.

அரசியலில் இப்படி ஒரு மனிதரா என நான் அதிசயித்து நின்றேன்.

திருச்சி தொகுதி மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நல்ல பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார் என்பது சத்தியம்.

அதுமட்டுமல்ல…… அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலில் நல்ல வழிகாட்டியாகவும் ஆற்றல் மிக்க தலைவனாகவும் ஆசானாகவும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இருப்பார் என்பது சர்வ நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD