
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள எந்த அதிகாரிகளும் இதுவரை பின்பற்றவில்லை.

அனைத்து கட்சி கொடிகளும் ரோட்டில் ஓரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இது போன்ற ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தெருக்களின் மூலைப் பகுதிகளில் கார்னரில் பொது பயன்பாட்டுக்கு உள்ள இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களையும் கேபிளுக்காக போடப்பட்டுள்ள அந்த இரும்பு கம்பங்களையும் மின்சார ஒயர்களை தொட்டு மேலே சென்று கொண்டிருக்கும்.

இது போன்ற ஆபத்தான கம்பங்களை அகற்றுவது யார் காவல் துறையா? மாநகராட்சியா? மின்சார துறையா?நெடுஞ்சாலைத்துறை துறையா? என்பதில் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

EB மின்சார லைன்களை ஒட்டி கட்சி கொடி கம்பங்களை வைக்க அனுமதிக்க கூடாது
இதனால் மின்சாரம் எந்த நேரமும் தாக்கி உயிரை பறிக்கும் ஆபத்து,
இதை விரைவில் அப்புறப்படுத்தி, மின்சார லைன்களில் படாதவாறு வெகு தொலைவில் வைக்க வேண் டும்.

அப்படி எடுக்காமல் பிடிவாதமாக இந்தால் EB நிர்வாகம் அந்த கொடி கம்பங்களை உடனே அப்புறப்படுத்த முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
#newtrichytimes
#TrichyCityCorporation
#TrichyPolice
#Tneb