New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப்பொருட்காட்சியை இன்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

நாள்தோறும் சாதனைகளை நிகழ்த்தி வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டார்.

அப்போது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி,இ.கா.ப.,அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப.,அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் திட்ட இயக்குனர் திருமதி.கங்காதாரிணி, செய்தித்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) திரு.கு.தமிழ்செல்வராஜன், நகரப் பொறியாளர் திரு.சிவபாதம், அரசுத்துறை உயர் அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD