New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த,

சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை,

இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்.

தொல். திருமாவளவன் எம்பி முன்னிலை வகித்தார். இந்த பெருமை மிகு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, மாண்புமிகு கனிம வளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னத்துறை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை திமுக மாவட்டச் செயலாளர் கே. கே. செல்வபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை எஸ்.கே. கலியமூர்த்தி, திருச்சி மாநகர் மாவட்டம் வெல்லமண்டி இரா. சோமு, புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் ராஜாஆதிமுலம், காசி, சிற்றரசு, கந்தரவக்கோட்டை ஒன்றியசெயலாளர் செ.வைரமூர்த்தி, புதுக்கோட்டை ஒன்றியசெயலாளர் ஞானபிரகாசம், மறவப்பட்டி பாண்டியன், அமானுல்லா, கறம்பக்குடி ஒன்றியசெயலார் கலையரசன், குணசேகரன், ஆரோக்கியசாமி, திருச்சி உறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன் மற்றும் கழக தோழர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD