
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமம் நந்தவனத்தில் கடந்த 15 வருடமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் செண்பகவல்லி என்ற 75 வயதான விதவை மூதாட்டி தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

இதில் வருந்தத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதே இடத்தில் அதே சர்வே நம்பரில் ஒரு தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒரே ரூமில் ஆறு மின்சார கனெக்சன் வைத்துள்ளது. அதில் ஒரு விவசாய கனெக்ஷன் உள்ளது. இது சம்பந்தமாக அறநிலையத்துறையை நடவடிக்கை எடுப்பதாக கூறி பல நாட்கள் ஆகிவிட்டது. மின்சார வாரியமோ விவசாயமே இல்லாமல் விவசாய கனெக்சன் வாங்கி பயன்பாட்டில் உள்ள மின் இணைப்பு மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பூசி மொழுகுகிறது.

செண்பகவள்ளியின் வேண்டுகோள் என்னவென்றால் ,
நான், 75 வயதான விதவை மூதாட்டி மற்றும் எனது கணவர் ஒரு ஓய்வு பெற்ற மின்சார வாரிய பணியாளர், மேலும் சட்டத்தில் இடம் இருப்பதால், தயவுசெய்து எனது கடைசி காலத்தில் அமைதியுடன் நிம்மதியாக வாழ்வதற்கு, தாங்கள் மின் இணைப்பு வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமாறு தாழ்மையுடன் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறோம்.”
அவர்கள் குடியிருக்கும் இடம் திருக்கோயிலுக்கு சொந்தமானது, அந்த இடத்திற்கு வாடகை தட்ட தயாராக இருக்கிறார். ஆனால் திருக்கோயில் நிர்வாகம் இன்று வரை வாடகை வாங்காமல் அலைக்கழிக்கிறது. மின்சார இணைப்பு பெறுவதற்கு NOCயும் வழங்கவில்லை. என்னைப் போன்று பலர் திருச்சி கரூர் மெயின் ரோட்டில் சிவன் கோயிலுக்கு எதிரே வாழ்ந்து வந்தனர். 15 வருடங்களுக்கு முன்னால் NH-ரோடு அகலப்படுத்தும் போது வீடு இடிக்கப்பட்டு, அன்றைய அரசாங்க நிர்வாகத்தால் இந்த இடத்தில் நாங்கள் குடியமர்த்தப்பட்டோம்.
தமிழ்நாடு மின்சார வாரிய விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாடகைதாரர் இடத்தின் உரிமையாளரின் அனுமதியின்றி மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சொல்கிறது. இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பதை எனக்கு எங்கள் ஊரில் வாழும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தான் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் எனது வீட்டிற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளேன்

. Kindly refer
“TAMIL NADU ELECTRICITY REGULATORY COMMISSION TAMIL NADU ELECTRICITY DISTRIBUTION CODE (As amended upto 31-03-2024)“
உரிமையாளரின் அனுமதியின்றி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆப்ஷனும் மின்வாரிய இணையதளத்தில் உள்ளது அதன் அடிப்படையில் எனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளேன்.
கீழே தங்களது உடனடி பார்வைக்கு தமிழக மின்சார வாரியத்தில் உள்ள அந்த ஆப்ஷன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

“எனக்கு மின் இணைப்பு கிடைப்பதால் நான் இந்த இடத்திற்கு எந்த விதத்திலும் உரிமையாளர் ஆக மாட்டேன் என்பதை அறிவேன். என்னை இந்த இடத்தை விட்டு நீக்கினால், நான் மின் இணைப்பை துண்டித்துக் கொள்வதற்கு ஒப்புக்கொள்கிறேன், இதற்கு மின்சார வாரியத்தின் விதிகளின்படி நான் INDEMNITY BOND, FORM-6 கொடுத்துள்ளேன். ஆகவே பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தயவு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். “

வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இவரது பெண்ணிற்கு கண்ணில் கோளாறு வந்து விட்டது, மேற்கொண்டு அவரது படிப்பையும் தொடரவில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் திருமணம் ஆன இவரது பெண்ணோ பேரக் குழந்தைகளோ இந்த வீட்டில் வந்து தங்குவதற்கு தயாராக இல்லை. அப்படியே வந்தாலும் இருட்டுவதற்கு முன்னால் இந்த வீட்டை விட்டு சென்று விடுவார்கள் என்பது தான் செண்பகவல்லி வாழும் அவல நிலை. தற்பொழுது செண்பகவள்ளி வீட்டில் தனியாக இருக்கிறார்.
நந்தவனத்தில் வாழும் மக்களின் கோரிக்கை என்னவென்றால், ” நாங்கள் குடியிருக்கும் இதே இடத்தில், எங்கள் சர்வே நம்பரில் தனியார் அறக்கட்டளைக்கு ஆறு மின்சார இணைப்புகள் ஒரே ஒரு ரூமில் கொடுத்துள்ளனர். அது பழைய மின்சார இணைப்பாக இருந்தாலும் தற்போது அந்த மின்சார இணைப்புகள் உபயோகத்தில் உள்ளன. ஆகவே கருணை அடிப்படையில் எங்களுக்கு மின் இணைப்பு தாருங்கள், ஒருவேளை அந்த சர்வே நம்பரில் குடியிருக்கும் அனைவரும் ஆக்கிரமிப்பு தாருங்கள் என்றால், தனியார் அறக்கட்டளையின் மின் இணைப்பு நீக்கும் போது, எங்களது மின் இணைப்பையும் நீக்கி கொள்ளுங்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொது. ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை என்று நினைக்கிறோம் என்கிறார்கள். ” எங்களுக்கு அடிப்படை வசதிகளை மட்டுமாவது செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
செண்பகவள்ளி, கருணை அடிப்படையில் தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க கோரி திருச்சி மாவட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் அவர்களிடமும் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளார்.

பொதுவாக இன்றைய தேதியில் எவராலும் ஓரிரு மணி நேரமே மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. பாவம் நந்தவன மக்கள் கடந்த 15 வருடமாக மின்சாரம் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.
பல நேரங்களில், நமது நீதிமன்றமும் மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவை, அதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் அவர்கள் புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தாலும் என்று சட்டம் போட்டுள்ளது. மின்சாரம் கொடுப்பது என்பது அடிப்படை உரிமை. ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தால் அவர்களை காலி செய்வது என்பது தனி, அவர்கள் அந்த இடத்தில் இருக்கும் வரை மின்சாரம் கொடுங்கள். அந்த இடத்தை விட்டு அவர்களை நீக்கினால் மின்சாரத்தையும் நீக்கிக் கொள்ளுங்கள் என்கிறது நீதிமன்றம்.
அதன்படி மின்சார வாரியத்திலும் அதற்கு வழிவகை உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரிய விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாடகைதாரர் இடத்தின் உரிமையாளரின் அனுமதியின்றி மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சொல்கிறது. அதன் அடிப்படையில் செண்பகவள்ளிவீட்டிற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளேன். விண்ணப்பத்தை, உதவி மின் பொறியாளர் ஹோல்டில் போட்டுள்ளார், என்ன காரணம் என்று கேட்டதற்கு கோயில் அனுமதி இல்லாமல் மின் இணைப்பு கொடுக்க இயலாது என்று கூறி தட்டிக் கழிக்கிறார். இந்த பூனைக்கு இப்போது யார் மணி கட்டுவது.

தற்பொழுது இந்த 75 வயதான விதவை மூதாட்டி தனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்களின் பிரச்சினையை தனது பிரச்சினையாக பார்க்கும் திரு துரை வைகோ அவர்கள் அலுவலகத்தை அணுகியுள்ளார்.சாமானிய மக்களின் ஆபத்பாந்தகனான துரை வைகோ அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . அவரின் அறிவுறுத்தலின்படி எம்பி அலுவலகத்தினர் உடனடியாக செயலில் இறங்கியுள்ளனர்.

பல மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீரங்கத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிய தலைமுறை பத்திரிக்கையாளர் லெனின் அவர்கள் நந்தவன மக்கள் பிரச்சனையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் தெரிவித்த பொழுது. அவர் இணை ஆணையர் கல்யாணியிடம் மக்கள் பணம் கட்ட தயாராக இருந்தால் உடனடியாக அனைவருக்கும் அடிமனை வாடகை ரசீது போட்டு தரச் சொல்லி உத்தரவிட்டார், அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நந்தவன மக்களின் பிரச்சனையின் தீர்வுக்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு நமது எம்பி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் செண்பகவள்ளியின் வீட்டில் மற்றும் அன்றி நந்தவனத்திலும் விளக்கு எரியும் என்று 75 வயதான விதவை மூதாட்டி மற்றும் மக்கள் நம்புகின்றனர்.