
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த அ.தமிழ்வாணன் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்து விட்டனர்.

இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது

எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவரை அழைத்து சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
