
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர்.

இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக நாம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இருதரப்பினரின் மோதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணைக்காக இன்று (19.06.2025) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல் இரா.இராசமாணிக்கம் மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், ஜங்சன் பகுதி முன்னாள் செயலாளர் ஜி.பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.
வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர் ஷீலா ஆகியோர் நேர்நின்று விசாரணைக்கு உதவினார்கள். வழக்கின் அடுத்த விசாரணையானது 24.06.2025 அன்று நடைபெறும்.
இந்த நீதிமன்ற விசாரணைக்கு மாவட்டச் செயலாளர்களுடன் உறையூர் பகுதிச் செயலாளர் ஆசிரியர் முருகன், பீமநகர் பகுதிச் செயலாளர் ஜங்சன் செல்லதுரை, மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருச்சி தெற்கு மாவட்டச் செய்திப் பிரிவு