
சாதி, மத பேதமற்ற மனிதநேயத் தொண்டு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, தமது 84-வது வயதில் இயற்கை எய்திய வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் துரை வைகோ..

மதிமுகழக தேர்தல் பணிச் செயலாளரும், சென்னை மண்டல இணையதள அணி ஒருங்கிணைப்பாளருமான வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்கள் கடந்த 05.06.2025 அன்று தனது 84-வது வயதில் இயற்கையை எய்தினார். இன்று (19.06.2025) அவரது இல்லம் சென்று அன்னையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் தெரிவித்தார் துரை வைகோ..

அப்போது உரையாடிக் கொண்டிருக்கையில், அன்னை வசந்தா வேணுகோபாலன் அவர்களின் சாதி, மத பேதமற்ற மனிதநேயத் தொண்டு பற்றி அறிந்து கொண்டார்..
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கடைசி வரை தன் வீட்டிற்கு வரும் மக்களுக்கு “இல்லை” என்று சொல்லாமல் உதவி செய்து வந்திருக்கிறார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இதற்குச் சாட்சியாகும்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் வந்தால் அவர்களை மதித்து அவர்களுடன் உறவாடுவது, தங்கள் நிறுவன ஊழியர்கள் வந்தால் அவர்களுக்கு அளவில்லாமல் கொடுப்பது, ஒவ்வொரு ஆண்டும் கோடை நாட்களில் தன் இல்லத்தில் மோர் வழங்குவது, எல்லா நாளும் இல்ல வாசலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்திருப்பது போன்ற எண்ணற்ற மனிதநேயத் தொண்டுகளுக்கு உரியவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

“இப்படிப்பட்ட தொண்டுள்ளம் கொண்ட தாயாரை முன்பே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டாமா?” என்று ஆதங்கத்தோடு அவரது மகன் சேஷனிடம் கேட்டார்.
அத்தகைய தொண்டுள்ளம் படைத்த தாயாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரின் மக்கள் தொண்டை நெஞ்சில் ஏந்தி, அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து புறப்பட்டார்..

தென்சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சைதை பா. சுப்பிரமணி எம்சி, காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜி. கருணாகரன், மாநில மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், மற்றும் மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தோழர்கள் உடனிருந்தனர்.




