ஈரோடு பொதுக்குழுவில் சந்திப்போம் வாரீர்…!
மக்கள் நலனுக்காகப் போராடும் மறுமலர்ச்சி திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் 31-ஆவது பொதுக்குழு 22.06.2025 ஞாயிற்றுக்கிழமைஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கழகத்தின் அவைத்தலைவர் “அறநெறியாளர்” அய்யா ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் அவர்களது தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் “திராவிடப் பெருந்தலைவர்” அய்யா வைகோ அவர்களும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான “இனஎழுச்சிப் புயல்” அண்ணன் துரை வைகோ அவர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கும் இதயமான பொதுக்குழு இது.

ஆகவே, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாவட்ட அவைத்தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொருளாளர், மாவட்ட துணைச் செயலாளர்கள் 4 பேர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இருவர், பொதுக்குழு உறுப்பினர்கள் 3 என மொத்தம் 12 பேருக்கு பொதுக்குழு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் 12 பேர், மாநில நிர்வாகிகள் 6 பேர் என 18 நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தால் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இருந்து 30 பேர் பொதுக்குழு தகுதி பெற்று இருக்கிறார்கள் மேலும், சிறப்பு அழைப்பாளர்கள் 10 பேர் என மொத்தம் 40 பேர் என்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி.
நமது மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு தகுதி பெற்ற பெரும்பாண்மை நிர்வாகிகளுக்கு கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு சில நிர்வாகிகளுக்கு இன்னும் கடிதம் வரவில்லை என கூறப்படுகிறது. அது பிரச்சனை இல்லை. பொதுக்குழு நடைபறும் மண்டபத்தின் வாசலில், நமது மாவட்டப் பதிவேட்டில் மேற்சொன்ன தகுதிக்குரியவர்களின் பெயர் இருக்கும். அந்த இடத்தில் கையொப்பம் இட்டு பொதுக்குழுவில் பங்கேற்கலாம்.

உடல்நிலை குறைபாடு உள்ளவர்களைத் தவிர, எஞ்சிய அனைத்து நிலை பொதுக்குழு உறுப்பினர்களும் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும்.
ஆகவே, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பொதுக்குழு தகுதி படைத்த அனைவரும் காலை 9 மணிக்கு மண்டபத்திற்கு வருக..! வாசலில் உங்களை வரவேற்க நான் காத்திருப்பேன்…!!
நட்புடன்
மணவை தமிழ்மாணிக்கம்,
மாவட்டச் செயலாளர்,
திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக.,
திருச்சி தெற்கு மாவட்டச் செய்திப் பிரிவு
21.06.2025,
1 Comment
இந்த அறிவிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தைப் பற்றியது. பல நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிலருக்கு இன்னும் கடிதம் வரவில்லை என்றாலும், அது பிரச்சனையாக கருதப்படவில்லை. பொதுக்குழுவில் பங்கேற்க விரும்புவோர் பதிவேட்டில் கையொப்பமிடலாம். பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?