
ஏழைகளுக்கு எளியவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவற்றோருக்கு உதவிட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் எள்ளளவும் தவறவிடக்கூடாது என்று பணியாற்றுபவர் தான் துரை வைகோ mp.
அவரின் லட்சியப்பணியில் ஒரு சிறு உதாரணம்.

திருச்சி மாவட்டம், கருடமங்கலம் முருகன் அவர்கள் ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டேண்டில் ஒரு ஓட்டுநராக பணி செய்து வந்தார். அவர் சொந்தமாக வாகனம் வாங்கி, ஒரு முதலாளியாக அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு பல வகைகளில் போராடி, கடன் வாங்கி, கார் வாங்கி அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் விமான நிலைய டாக்ஸி ஸ்டேண்டில் முழு எண்ணிக்கைக்குரிய வாகனக்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி விடுதலை சிறுத்தை கட்சிகளின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சி. சக்தி ஆற்றலரசு மூலமாக துரை வைகோ அவர்களின் கவனத்திற்கு வந்தது.

கருடமங்கலம் முருகன் அவருடைய வாழ்வாதாரத்தை காக்க இது பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதற்கான முயற்சிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்து கொண்டுவந்தார் துரை வைகோ. விமான நிலைய அதிகாரிகளிடம் இதற்காக வேண்டி தொடர்ந்து பேசினார்..

சில நாட்களுக்கு முன்பு அந்த வாய்ப்பு அவர் கைக்கு எட்டியது. அவரது வாழ்வாதாரம் உயர வழி கிடைத்தது. அவர் தொழிலாளியாக பணி செய்த இடத்திலேயே முதலாளியாக தன்னை உயர்த்தி கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதற்காக வேண்டி நேற்று (10.05.2026) மாலை 5 மணியளவில் திருச்சி விமான நிலைய வளாகத்தில் துரை வைகோ அவர்களை சந்தித்து, திருச்சி விமான நிலைய டாக்ஸி ஸ்டாண்டில் இணைக்கப்பட்ட தனது சொந்த வாகனத்தின் சாவியை என் கரங்களில் கொடுத்து பெற்றுக்கொண்டார். வாழ்த்தியும், பாரட்டியும் அனுப்பிவைத்தார் துரை வைகோ.

கனவுக்கும் உழைப்பிற்கும் சாதி இல்லை மதம் இல்லை. உண்மையாய் உழைப்பவர்கள் உயர்வார்கள். அவர்களுக்கான வாய்ப்பை இறைவனோ இயற்கையோ உருவாக்கும். அப்படி ஒரு வாய்ப்பை துரை வைகோ மூலமாக உருவாக்கிக்கொடுத்தது உள்ளபடியே மகிழ்ச்சி.
