

ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நிறுவன தலைவர் குணசேகரன் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிறுவன தலைவர் குணசேகரன் கூறும்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்கிறார்களோ அவர்களிடம் கூட்டணி அமைப்போம்தெலுங்கு பேசும் மக்களை ஜாதி வாரி கணக்கெடுப்பில் பிரிவுகள் வாரியாக கணக்கெடுக்கின்றனர் அவர்களையும் ஜாதி வாரிய கணக்கெடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் .


தமிழ்நாட்டில் தெலுங்கு பேச கூடிய மக்கள் 3 கோடி பேர் உள்ளனர் மேலும் பதிக்கப்பட்ட தமிழ் சமுதாய மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் எனவே 4 கோடி பேர் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள் அணைந்து மக்களுக்கும் விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்து முன்னணி காட்சிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறோம்.விஜயின் செயல்பாடு நன்றாக உள்ளது வாய்ப்பு இருந்தால் அவரிடமும் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
