
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் – முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ரஷ்யா – விடாமுயற்சியோடு மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி
தோண்டத் தோண்டப் பூதம் கிளம்புவது போல ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை பயங்கரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இன்றைய முற்பகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது நூறு அல்ல, ஆயிரக்கணக்கானவர்களாக இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த கிஷோர் சரவணன் உட்பட 100-க்கு மேற்பட்ட இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
09-09-2025 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூட்டத்தில் முடிவு. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று (07-08-2025) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில்,:- அண்ணா

மாவட்ட துணை ஆட்சியருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய விஹச் பி நிர்வாகிகள்
ரக்ஷா பந்தன் முன்னிட்டுவிசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துர்கா வாஹினி மாவட்ட பொறுப்பாளர் தனுஸ்ரீ சண்முகம் அவர்கள் தலைமையில் ராக்கி அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டப் பொறுப்பாளர் திருமதி பிரபாவதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் அழகு யுவராஜ், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார், செல்வி ப்ரீத்தி, செல்வி துர்காஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் – மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கிஷோர்க்குமார் கேள்வி
வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் திருச்சி மாநகராட்சியின் அலட்சிய போக்கால் வணிக வளாகங்களில் பார்கிங் இல்லாமலும்_ பார்கிங்கை பின்னாளில் வணிக உபயோகத்திற்காக மாற்றும் வணிக வளாகங்களால் சாலையோர பார்கிங் அதிகரித்து தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திருச்சி மாநகராட்சி எந்த முயற்சியும் செய்யவில்லை. சாலை அகலபடுத்தும் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் எதிர்கால திட்டமிடாமல்

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர்: ஆக9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்

பால்பன்னை துவாக்குடி அணுகுசாலை 16 ஆண்டுகல கோரிக்கை – களத்தில் துரை வைகோ mp
எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள NH-67 பால்பண்ணை–துவாக்குடி பகுதியில் அணுகு சாலை (Service Road) அமைக்க வேண்டும் என்ற 16 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித்தந்திட, ஒன்றிய அரசின் மத்திய நிதி பகிர்மானத்திலிருந்து ஒதுக்கீடு செய்துதர வேண்டி எனது கோரிக்கை கடிதத்துடன் மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நித்தின் ஜெயராம் கட்கரி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தேன். திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள

ஜி கார்னர் பகுதியில் சூழல் சாலை மத்திய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை
இன்று (08.08.2025) மதியம், மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாநகரின் மிகமுக்கிய 15 ஆண்டுகால கோரிக்கையான G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழல் சாலையை கட்டுவதற்கு 32,415 சதுர மீட்டர் (8.01 ஏக்கர்) இரயில்வே நிலத்தை பயன்படுத்த No Objection Certificate (NOC) ஐ விரைவாக வழங்குமாறு கோரிக்கை கடிதம் கொடுத்து

லால்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆகஸ்ட் 7திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைபணியாளர்களின் கோரிக்கைகளுக்காக இன்று காலை காத்திடுப்பு போராட்டம் தொடங்கியது. ஹியூமன் கிரேட் நிறுவனம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்துள்ள தினக்கூலி 172 ரூபாய் வழங்க வேண்டும், ஓட்டுநராக பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 802 வழங்க வேண்டும்,PF, ESI ஊழியர்களிடம் பிடித்து நிறுவனத்தின் பங்கையும் செலுத்தி அதற்கான ரசிதையும் வழங்க வேண்டும்,LIC பிடித்தம் செய்து கட்ட வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் டப்பா கூட்டுவதற்கு விளக்குமாறு வழங்க

சாஸ்திரா வில் ஹர்ஷாமித்ரா மருத்துவமனையின் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று 7.8.2025தஞ்சாவூர் சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக இன்றைய தலைமுறையினருக்கு புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. G.Govindaraj அவர்கள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார் முன்னதாக டாக்டர் விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்று கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் துரை வைகோ எம்பி சந்திப்பு
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் அவர்களை இன்று (07.08.2025) மதியம் 1 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்து, ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன் மீட்கப்படுவதற்கு நேற்று நான் அளித்த விளக்கங்களை கோடிட்டு காட்டியபோது அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார். இதுகுறித்து அவர் ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, கிஷோர் சரவணன் தனது வழக்கில் தண்டனையை ரத்துசெய்ய ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டு போருக்கு