
அரவிந்த் கண் மருத்துவமனை ஸ்தாபகர் பத்மஸ்ரீ டாக்டர் நம்பெருமாள் சாமி அவர்கள் மறைவு துரை வைகோ எம்.பி கண்ணீர் அஞ்சலி
கண் மருத்துவத்தில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி,கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை,எளிய,சாதாரண நடுத்தர மக்களுக்கு,உயர்தர கண் மருத்துவ சிகிச்சைகளை,எந்த விதமான பாகுபாடுகளும்,எந்த விதமான லாப நோக்கங்களும் இன்றி இன்று வரையிலும் செய்து வரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமான அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கியவர்களுள் ஒருவரான மருத்துவர் பத்மஶ்ரீ திரு.நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்து விட்டார். தேனி அருகே அம்பாசமுத்திரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மருத்துவர் நம்பெருமாள்சாமி,கண் மருத்துவப் படிப்பில்

குரலற்றவர்களின் குரலாக 61 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் வைகோ வின் வாரிசு துரை வைகோ – Human Wildlife Conflict புகழாரம்
வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் உள்ள Constitution Club of India கூட்டரங்கத்தில் நேற்று (22.07.2025) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ உடன் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே.சி. வேணுகோபால் மற்றும் திரு. கொடிகுன்னில் சுரேஷ்

4 மணி நேரத்திற்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் மக்கள் பணியில் மூழ்கிய துரை வைகோ mp
இன்று காலை 6:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்த திரு துரை வைகோ எம்பி அவர்கள் விரைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை

நாடாளுமன்றத்தில் குன்றாண்டால் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பிய துரை வைகோ mp.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக, ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும், அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,பின்வருமாறு : கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில்,

நாடாளுமன்றத்தில் குன்றாண்டால் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பியா துரை வைகோ mp.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக, ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும், அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,பின்வருமாறு : கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில்,

திருச்சி மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – சிவாஜிகணேசன் நினைவுநாள் – குமரிஅனந்தன் நினைவேந்தல் உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில தலைவர் புத்தன் அவர்கள் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துகொண்டு

ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மதுரையில் தனியார் விடுதியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் விழா நடைபெற்றது. சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் வேந்தர் பாண்டியராஜன் அவர்கள், பழைய காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேலான் சோலைமான் அவர்கள்,உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன் அவர்கள், வேர்ல்ட் ரெக்கார்ட் செய்யும் மாணவ மாணவர்களை ஊக்குவிக்கும் டாக்டர் பாலு அவர்கள், கொற்றவை குரூப் ஆப் கம்பெனி நிறுவன தலைவர் நாகராஜ் மற்றும்

10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரி செய்திடக் கோரியும், 243 அரசாணையை உடனே ரத்து செய்திடக்கோரியும் தணிக்கை தடை என்ற பெயரில் பென்சனுக்கு ஊக்க ஊதியத்திற்கும் வேட்டு வைப்பதை தடுத்து நிறுத்திட கோருவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் மறியல் போராட்டம் இன்று

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி

பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா? பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழி அற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும்