லால்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆகஸ்ட் 7திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைபணியாளர்களின் கோரிக்கைகளுக்காக இன்று காலை காத்திடுப்பு போராட்டம் தொடங்கியது. ஹியூமன் கிரேட் நிறுவனம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்துள்ள தினக்கூலி 172 ரூபாய் வழங்க வேண்டும், ஓட்டுநராக பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 802 வழங்க வேண்டும்,PF, ESI ஊழியர்களிடம் பிடித்து நிறுவனத்தின் பங்கையும் செலுத்தி அதற்கான ரசிதையும் வழங்க வேண்டும்,LIC பிடித்தம் செய்து கட்ட வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் டப்பா கூட்டுவதற்கு விளக்குமாறு வழங்க
சாஸ்திரா வில் ஹர்ஷாமித்ரா மருத்துவமனையின் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று 7.8.2025தஞ்சாவூர் சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக இன்றைய தலைமுறையினருக்கு புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. G.Govindaraj அவர்கள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார் முன்னதாக டாக்டர் விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்று கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் துரை வைகோ எம்பி சந்திப்பு
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் அவர்களை இன்று (07.08.2025) மதியம் 1 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்து, ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன் மீட்கப்படுவதற்கு நேற்று நான் அளித்த விளக்கங்களை கோடிட்டு காட்டியபோது அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார். இதுகுறித்து அவர் ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, கிஷோர் சரவணன் தனது வழக்கில் தண்டனையை ரத்துசெய்ய ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டு போருக்கு
வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றும் துரை வைகோ mp
சோழமாதேவி தார்ச் சாலை கோரிக்கை நிறைவேறியது. எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், ஐ.டி. பார்க் சாலை சீரமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. அந்தப்பணியை 09.06.2025 அன்று, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது, சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில்,
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் – புதுடெல்லியில், அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு துரை வைகோ எம்பி மலர்மாலை அணிவித்து மரியாதை
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (07.08.2025) காலை 9:30 மணியளவில், புதுடெல்லியில், அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும், மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் புகழ் வணக்கம் செலுத்தினேன். நூறாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்த பெருமை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா
அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் அவர்களின் தலைமையில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்களின் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெட்டறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1 . தேசிய, மாநில, மாவட்ட, கோட்ட மற்றும் அணி தலைவர்கள் அடங்கிய சுமார் 95 நிர்வாகிகள் 65 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கபட வேண்டும். 2 . ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்
இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை
நேற்று மாலை திருப்பூர் பல்லடம் மெட்ரோ கிளம்பில் அறம் அறக்கட்டளை சார்பில் ஏகாதசி சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்தில் “இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் முன்னாள் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவருமான மா. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஜாதியப் படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுக் கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்,
போர்க்களத்தில் கருக காத்திருக்கும் இளம் தளிர் மீட்டெடுக்கும் விடாமுயற்சியோடு புது தில்லியில் போராடி வருகிறார் நம் தாயுமானவர்
இன்று (06.08.2025) காலை மருத்துவக் கல்விக்காக ரஷ்யா சென்று சிக்கிக்கொண்ட இந்திய மாணவர் கிஷோர் சரவணன், தனது பெற்றோரின் அலைபேசியில் அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் என்னை அழைத்துச் செல்ல வாகனம் வரும், அதற்குள் என்னை தயாராக இருக்க சொல்லியுள்ளார்கள்” என்று கூறியதுடன், அது நேராக போர்முனைக்குத்தான் போகும் போல் தெரிகிறது என்று கூறி மனமுடைந்து அழுதுள்ளார். இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன், அதனை விளக்கமாக விவரித்து எழுதி வெளியுறவுத்துறை அமைச்சர்
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா உடன் துரை வைகோ mp சந்திப்பு
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, இன்று (05.08.2025) நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி, அவை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். கோரிக்கைகளின் விவரம்:கோரிக்கை 1: கடந்த 14.12.2016 அன்று நடைபெற்ற பணியாளர்களுக்கான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 206-வது
தொடர்ந்து ரஷ்யா வில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவனை மீட்க போராடும் நவீன விக்கிரமாதித்தன்
ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை மீட்க மிக அவசர வேண்டுகோளுக்காக வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஷ்ரி அவர்களை மீண்டும் இன்று (04.08.2025) மதியம் 2:30 மணியளவில் சந்தித்தேன். மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை ரஷ்ய – உக்ரைன் போர்முனையிலிருந்து மீட்க கோரி எனது தொடர் போராட்டத்தில் இன்று பிரதமரை சந்தித்துவிட்டு, உடனே வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தேன். அப்போது, மாணவரிடமிருந்து கிடைத்த



