
ரஷ்யாவில் சிக்கிய மாணவன் – மீட்கப்போராடும் துரை வைகோMP
ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, நான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ரஷ்யாவின் துணைத் தூதரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து, இதுவரையிலான நிலவரத்தை எடுத்துரைத்துள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எனது கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! துரை வைகோMP கோரிக்கை
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக! ஒன்றிய நிதி அமைச்சருடன் சந்திப்பு! திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO – World Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. இன்று (21.08.25) மாலை ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி

திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் துரை வைகோMP சந்திப்பு
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் சந்திப்பு! தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான போக்குவரத்து மற்றும் இரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலர் துறைமுகத்திற்கு (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. திருச்சியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கவும், தொழில்

ரஷ்ய ராணுவத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்- விக்ரமாதித்தனை போல மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி- பிரதமரை நேரில் சந்தித்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஒருபுறம் இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் ரஷ்யாவில் கிஷோர் சரவணன் போர் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்துடன், இன்று (21.08.2025) காலை பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று, வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களையும் சந்தித்து, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்து கீழ்கண்ட கோரிக்கை கடிதத்துடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்! நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின்

உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கை- துரை வைகோMP
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தேன். இதன் தொடர்ச்சியாக, திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு இந்த உலர் துறைமுகத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இன்று (20.08.2025) மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! துரை வைகோMP மக்களவை செயலாளருக்கு மனு
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! மக்களவை செயலாளருக்கு மனு! பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட திரு. கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும் என்ற எண்ணற்ற தொடர் முயற்சிகளில ஈடுபட்டு வருகிறேன். இப்பிரச்சனை தொடர்பாக 15 கட்சிகள் மற்றும் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்றுபிரதமர் மோடி அவர்களுடன் சந்திப்பு,,வெளியுறவு அமைச்சர்,

ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே உடன் துரை வைகோMP சந்திப்பு
கடந்த 05.08.2025 அன்று மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களிடமும், 07.08.2025 அன்று தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees’ State Insurance Corporation – ESIC) இயக்குநர் (பொது) திரு. அசோக் குமார் சிங், இ.ஆ.ப., அவர்களிடமும் நேரில் வழங்கிய, இன்று (19.08.2025) காலை மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர்

ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவனை மீட்க போராடும் துரை வைகோ எம்பி
மீண்டும், உயிர்காக்கும் அவசரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக, இன்று (18.08.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை சந்திப்பதற்காக அவருடைய அமைச்சகம் சென்றிருந்தேன். அங்கு அமைச்சர் இல்லாத காரணத்தால், கோரிக்கையின் அவசரம் கருதி அவருடைய தனிச்செயலரை சந்தித்து கீழ்கண்ட இரண்டு கோரிக்கை கடிதத்தை வழங்கினேன். அதில், ரஷ்யாவில் போர் முனையில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், கடந்த 16.08.2025 அன்று தனது பெற்றோருக்கும் எனது

இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்!
எனது வேண்டுகோளை ஏற்று இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்! இராஷ்யாவில் போர்முனையில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், ஆகஸ்டு 12 ஆம் தேதிசந்தித்து உரையாடினேன். அப்போது கிஷோர் சரவணன் என்ற