துரை வைகோ MP யின் தொடர் மனிதாபிமான செயல்கள்
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினர்,கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை வைகோ MP யை நேரில் சந்தித்து,சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி கோரினர். சுற்றுலா விசாவில் சென்றிருந்த காரணத்தாலும், அவர் வேலைக்காக அங்கு தங்கியிருந்த சூழ்நிலையாலும்,சட்டப்பூர்வ
துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும்
காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை
14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மீட்க கோரிக்கைஅந்தநல்லூர் கிராம் சர்வே எண் 186 / 2A1,3 திருவரங்கம் வட்டம் எலமனூரில் வசிக்கும் மக்கள் சார்பாக, இன்று மாவட்ட ஆட்சியரிடம் காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கை என்னவென்றால், ” திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் எலமனூரில் வசித்து வருகிறோம்.
100 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க கோரிக்கை.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் சர்வே எண் 203ல் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களின்படி 100சென்டுக்கு மேல் அரசாங்க நிலம், எலமனூர் அண்ணா நகர், ஒத்த தெருவிற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. அரசாங்க நிலத்தை தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு, தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, பொது மக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
ஸ்ரீரங்கம், திருவானைக்காவில் அமித்ஷா சுவாமி தரிசனம்
திருவானைக்கா அருள்மிகு ஜம்பிகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார் திருவானைக்கா கோயில் வடக்கு வாசல் வழியாக 10:45 மணிக்கு வருகை தந்தார் அவரை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் வெள்ளி குடத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள பிரசன்ன விநாயகரை தரிசித்து விட்டு மூலவர் அகிலாண்டேஸ்வரி தரிசனம்
மணப்பாறை கோவில்பட்டியில் சமத்துவ நடைபயணம் வந்த வைகோ அவர்களுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு
திருச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையிலான சமத்துவ நடைபயணம் இன்று மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட எல்லையான கோவில்பட்டி இலஞ்சமேட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் மதிமுகவினர் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் திரண்டு வரவேற்றனர். தாரை தப்பு வாத்தியங்கள் முழங்க மாடு மயிலாட்டம் கட்டைக்கால் மனிதர்கள் ஆட்டத்துடன் நடைபயணம் மேற்கொண்ட வைகோ அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மணப்பாறை அருகே பழமையான மரங்களை வெட்டி கடத்திய கும்பல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம். மணப்பாறை ஊராட்சி ஒன்றியம். மொண்டிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமானது ஒண்டிப்பட்டி குளம். இந்த குளத்திற்கு செல்லும் பிரதான வாரியில் மிகவும் பழமை வாய்ந்த வேப்ப மரங்கள் மற்றும் ஆவி மரங்கள்,உசிலை மரங்கள் இருந்தன. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும். இந்த நிலையில், திடீரென மர்ம கும்பல் ஒன்று வாரியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலிருந்த வேப்பமரங்கள், ஆவி மரங்களை வெட்டி திருட்டுத்தனமாக கடத்தியுள்ளது. இதன்
பூங்கா நிலம் அபேஷ்? அதிருப்தியில் பொதுமக்கள்
ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..! கோவை,(26-12-2025)கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.அந்த நிலம் 1993ஆம்
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்திடுக! மாண்புமிகு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று
10008 வடை மாலை அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்
ஸ்ரீரங்கம் டிச : 20 ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை காவேரி பாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில் ஹனுமன் ஜெயந்தி மகோத்சவ விழா இன்று 19.12.2027 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு 10 ஆயிரத்து எட்டு வடமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றுப்படி செய்யப்பட்டு திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார்கள். மகா அன்னதானமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஹனுமன் பிரசாதத்தை பெற்றுக்


