. தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று நாட்கள் நடைபெறும் வார இறுதி நாள் சிறப்பு ஆப்ரேஷனை (week end special operations) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேற்று 12.04.2025 ம் தேதி இரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

தமிழக காவல்துறை இயக்குனர் காவல் படை தலைவர் அவர்கள் தமிழகம் முழுவதும் 12.4.2025, 13/4/2025 மற்றும் 14.4.2025 ஆகிய தேதிகளில் வார இறுதி நாள் சிறப்பு ஆபரேஷன் செய்து குற்றச் செயல்களை தடுக்க அறிவுறுத்தி இருந்தார்கள். இந்த மூன்று நாட்களில் இரு ஷிப்டுகளில் இருசக்கர வாகன தணிக்கைகள் செய்யவும் தங்கும் விடுதிகளை தணிக்கை செய்யவும் ரோந்து பணி மேற்கொள்ளவும் போலி வாகன எண்கள் பொருத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறியவும் இருசக்கர வாகனங்களில் டம்மி ரன்ஸ் (காவலர்களை சாதாரண உடைகள் ஆயுதங்களுடன் அனுப்புதல் ) மூலம் திருச்சி மாநகரத்தில் வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகள் தணிக்கை ஆகியவை முறையாக நடக்கிறதா என கண்காணித்திடவும் மேலும் மாநகர காவல் ஆணையர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இரவு பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார்கள் அதன்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கண்டவாறு வீக் எண்டு ஸ்பெஷல் ஆப்ரேஷன் மற்றும் இருசக்கர வாகனங்களில் டம்மி ரன்ஸ் மூலம் வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகளில் தணிக்கைகள் நேற்று 12.4.2025-ம் தேதி மாலை திருச்சி மாநகரில் 9 சோதனை சாவடிகள் சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 14 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் 10 புதிய இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் 3 நெடுஞ்சாலை நான்கு ரோந்து வாகனங்கள் மற்றும் மாநகரின் 38 முக்கிய சந்திப்புகளில் 6 ஆய்வாளர்கள் 14 உதவி ஆய்வாளர்கள் 50 காவல் ஆளிநர்கள் மற்றும் வழக்கமான 50 இரவு ரோந்து ஆளிநர்கள் என காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுடன் தீவிர வாகன தணிக்கை மற்றும் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் 10 டம்மி ரன்ஸ் (காவலர்களை சாதாரண உடைகள் ஆயுதங்களுடன் அனுப்புதல்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனங்கள் போலி எண்கள் கொண்டு வலம் வருகின்றனவா எனவும் டம்மி ரன்ஸ் இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சரியாக கண்டுபிடித்து விசாரணை செய்கிறார்களா எனவும் மேலும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து F. R. S செயலி மூலமாக குற்றவாளிகளின் முக அடையாளங்களை சரிபார்த்தும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி N. காமினி இ கா ப அவர்கள் நேற்று 12.4.2025 தேதி இரவு திருச்சி மாநகரில் நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பேட்டர்ன் லைட் (Button light) மற்றும் ரிப்லைட்டிங் ஜாக்கெட் அணிந்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வாகன தணிக்கை செய்யவும் அனைத்து இரு சக்கரம் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேற்கண்ட சிறப்பு வாகன தணிக்கைகளின் மூலம் திருச்சி மாநகரில் நேற்று 16 D (மது அருந்தி வாகனம் ஓட்டுதல் வழக்குகள்) மற்றும் இதர 300 வழக்குகள் என மொத்தம் 316 மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற தொடர்ந்து தீவிர வாகன தணிக்கை செய்து மற்றும் தீவிர இரவு ரோந்துகள் மேற்கொள்ளப்படும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
