உடல் நலக்குறைவு காரணமாக பத்திரிகை ஊடகவியலாளர் திரு.சிவஞானம் அவர்கள் காலமானார் எனும் செய்தி துயரமளிக்கிறது.
தந்தி டிவி, பாலிமர், நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் தவிர எழுத்துப் பணி, கவிதைப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
புற்று காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகியுள்ளார்.
அன்னாரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.