
அ இ அ தி மு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று..திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL* முன்னிலையில்.

.காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் T.கார்த்திகேயன் தலைமையில் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் K.R.ரவி, திருச்சி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சுதாகர் உள்ளிட்ட துறையூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் துறையூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.காமராஜ், துரையூர் நகர கழக செயலாளர் அமைதி பாலு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தொட்டியம் வரதராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எட்டரை T.அன்பரசு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
