New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி சாதனாவில் பண்பாட்டு பயிற்சி முகாம்.

கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளின் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு சாதனா ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது.

அதன் அடிப்படையில் குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவதற்காக குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்த்து புதிய புதிய விஷயங்களை அதாவது ஸ்லோகம் பாடல்கள் கதை ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருங்கால சந்ததியின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி முதல் 11/5/2025 முடிய 7 நாட்களுக்கு காலை 09:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள ஆண் பெண் குழந்தைகளுக்கு பண்பாட்டு பயிற்சி வகுப்பு முகாம் நடைபெறுகின்றது

இந்த முகாமில் ஏழு நாட்களும் தவறாமல் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது இந்த பயிற்சி முகாமிற்கான கட்டணமாக ரூபாய் 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
ஸ்ரீ கேசவன் 9486110948
ஸ்ரீ ஸ்ரீகாந்த் 9791734506

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD