New Trichy Times

Current Date and Time
Loading...

அன்புடையீர் வணக்கம்!

துபாயில் நடைபெறவுள்ள “Dubai Future Summit” என்ற மாநாடு, வேகமாக வளர்ந்து வரும், தொழில்நுட்பம் (Technology), புத்தொழிலாக்கம் (Startup), ரியல் எஸ்டேட்(Real Estate), மின் வணிகம் (e-commerce), நிதி (Finance), மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (Healthcare and Wellness) ஆகிய துறைகளில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை ஆராயும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதனை WIT Events நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.

தொழிலதிபர்கள், துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றும் இந்த மதிப்புவாய்ந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதற்காக, எதிர்வரும் 14.06.2025, சனிக்கிழமை அன்று மதியம் 12:30 மணிக்கு துபாய் விமான நிலையத்தை வந்தடைவேன். அங்கு வழங்கப்படும் வரவேற்ப்பை 15 நிமிடங்கள் ஏற்கிறேன்.

அன்று மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, துபாய் JW Marriott Marquis Hotel லில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.

அடுத்த நாளான, 15.06.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை அதே ஹோட்டலில் கழகத் தோழர்களை, ஆதரவாளர்களை சந்திக்கவும், கலந்துரையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.06.2025

dubaifuturesummit #witevents #vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD