
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின் அர்பணிப்பு மிக்க பணியே முக்கிய பங்கு வகிப்பதாக அவர்களைப் பாராட்டினார்.

சுமார் 2:30 மணி நேரமாக நடைபெற்ற ஆய்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருந்தாளுநர்கள், உள் மற்றும் வெளி நோயாளிகள், தாய்மார்கள், சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என அனைவரையும் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர்களின் தேவைகள் குறித்து நீண்ட உரையாடலில் ஈடுபட்டு அதன் மூலம் குறிப்பெடுத்துக்கொண்டார்.

இம்மருத்துவமனையில், ஒரு கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானதாகவும், இன்னும் சில கட்டடங்களில் பலவகையில் உட்கட்டமைப்பில் பிரச்சனைகள் உள்ளதையும் அதை விரைந்து சீர்செய்ய வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்தினர்.

மேலும், இடப்பற்றாக்குறை, போதிய செவிலியர்கள் இல்லாமை, இரண்டடி தாழ்வான நில அமைப்பு, அதனால் மழை நீர் புகுந்துவிடுதல், சாக்கடை முறையாக வெளியேறாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வும்,

மருத்துவ உபகரங்கள், காத்திருப்போருக்கான இருக்கைகள், ஏசி உள்ளிட்ட பொருட்களின் தேவைகள் குறித்தும் கோரிக்கை வைத்தனர்.

மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வரவேண்டும் என்று நான் அனைத்துவிதமான முயற்சிகளையும், குறிப்பாக துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைப்பது, சிஎஸ்ஆர் நிதியை பெற முயற்சிப்பது, போதிய கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்வது, புதிய இடத்தை தேர்வு செய்ய முயற்சிப்பது, இதற்காக வேண்டிய அதிகாரிகளை அணுகுவது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்..

மேலும், இந்த மருத்துவமனைக்கு எதிரிலேயே புதிய பேருந்து நிலையம் வர இருப்பதால் இன்னும் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அதனால் வேறொரு உரிய இடத்தை தேர்வுசெய்து புதிய கட்டடங்கள் கட்டி அங்கு மருத்துவமனையை மாற்றப்படுவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தனது கருத்தை பதிவுசெய்ததுடன், அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவேன் என்று கூறினார்.

இந்த ஆய்வின் இறுதியில், சற்றுமுன் பிறந்த ஆண் குழந்தைக்கு நான் பெயர்வைக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் விரும்பினர்.

அப்போது, அந்த ஆண் குழந்தைக்கு பிரபாகரன் என்று பெயர்சூட்டினார்..
இந்த மகிழ்வோடு, அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றான சுகாதாரத்தை வழங்கும், அவசர சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனைகள் சிறப்பாக இயங்கவேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் ஆய்விற்கு அடுத்த பணிகளை திட்டமிட்டபடி அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த ஆய்வின்போது, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டிடிசி சேரன், பகுதி செயலாளர்கள் ஸ்ரீரங்கம் சி. ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் , துறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன், பொன்மலை பகுதி செயலாளர் F.S. ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் இளங்கோவன், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், பொதுக்குழு உறுப்பினர் இரா. மனோகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வையம்பட்டி ராஜா, ஸ்ரீரங்கம் சௌந்தர், வட்ட செயலாளர் சன். நாக சுந்தரம், இணையதள அணி அமைப்பாளர் பொறியாளர் ஸ்டீபன் சுரேஷ், சுல்தான் மற்றும் ஏராளமான கழக தோழர்கள் உடனிருந்தனர்.
vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince
#NewTrichyTimes