
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி கே பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி, மு பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.

