New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாம்பே பாதாம் மில்க் ஸ்டால் என்கிற கடையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கபட்டு பாட்டிலில் அடைத்து விற்கபடும் பால் சம்பந்தமான குளிர் பானங்களில் தயாரிக்கபட்ட தேதியோ, காலாவதி தேதியோ , விலையோ, எதுவும் அச்சிடாமலும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் இக்கடையில் விற்கபடும் பாதாம்பால், ரோஸ்மில்க், பிஸ்தாபால் போன்றவற்றில் அதிகபடியான செயற்கை வாசனை பொருட்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய கலர்கள் ஆகியவையும் அதிகம் சேர்க்கபடுகிறது.

இக்கடையில் முதல் நாள் விற்பனையாகாமல் மீதம் ஆகும் பாதாம்பால் போன்றவைகளை அடுத்த நாள் பாட்டிலில் அடைத்து விற்பதும், கடையின் அருகிலேயே மிகவும் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

இந்த செயற்கை பொருட்களின் கலப்படத்தால் பொது மக்களுக்கும், இளையவர்கள், குழந்தைகளுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இந்த கடையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD