
தொகுதி மக்கள் நலன் சார்ந்த சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியின் பிரதான பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை நோக்கி நகர்த்தி வருகிறோம். அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் TO பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் நெடுஞ்சாலை விளக்குகள் இல்லாததால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதனை தொடர்ந்து நம்மை நேரில் அழைத்த அன்பு அண்ணன் திரு.துரைவைகோ அவர்கள் வாஞ்சையோடு பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்டு கொண்டதோடு விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்வதாக நம்மிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் சகோதரர் திரு.G.சதிஷ்குமார் உறுதுணையாகயிருந்தார்.
அன்புடன்
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
செல்: 98659 62927.
பதிவு: 20.05.2025, 07.00.P.m