NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL*, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் *ப.குமார்.BSc.,BL.Ex.MP*, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் *J.சீனிவாசன்* ஆகியோரின் அறிக்கை:-மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் *புரட்சித் தமிழர் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…”NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்” என்று பொய் கூறி ஆட்சியைப் பிடித்த *விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசினால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி* செலுத்தும் விதமாக,ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் *19.4.2025, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்.*

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இங்ஙனம்….*ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்*

Related Posts

POST MY ADD