NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி, ஜூன் 26:

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக
பணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Posts

POST MY ADD