
துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்திருச்சி. மே. 27-துவாக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்,செக்டார் மற்றும் என்.ஐ. டி, துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி, எலந்தபட்டி. காந்தலூர், பெரிய சூரியூர், சின்ன சூரியூர் ஆகிய பகுதிகளில் நாளை 28ம் தேதி காலை 9:45 முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ன மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
