New Trichy Times

Current Date and Time
Loading...

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பள்ளிவாசல், மதரஸா, கபர்ஸ்தான் ஆகியவற்றை விட்டுத்தர மாட்டோம் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வக்பு வாரிய சட்டத்த உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொதுசெயலாளர் பொறியாளர் முகமது சித்தீக், சதாம், மஜீத், பிச்சைகனி, சபியுல்லா, ரியாஸ், பெண்கள் அமைப்மை சேர்ந்த தவுலத்நிஷா மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD