நமது முன்னோர்களால் கட்டப்பட்ட கீழ் போக்கிக் குழாய் மற்றும் அணையின் மதகுகளை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் கொடிங்கால் வாய்க்காலில் பழங்காலத்தில் அச்சுக்கல் கொண்டு கட்டப்பட்ட, தற்பொழுது உடைந்து பயனற்ற நிலையில் உள்ள கீழ் போக்கு குழாய், கொடிங்கால் வாய்க்கால் தலைப்பு மதகில் உள்ள அணை மற்றும் அதன் மதகுகளை சரி செய்து தருமாறு முதல்வரின் முகவரி மற்றும் நேற்று நடந்த ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக, முக்கொம்பு
துரை வைகோ Mp தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று (10.06.2025) காலை 10:00 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு நிறைவு பெற்றது. துரை வைகோ Mp திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக பொறுப்பேற்று மூன்றாவது கூட்டத்தை இன்று தலைமையேற்று நடத்தினார்.. ஒன்றிய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றை பற்றியும்
யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் 12.06.2025 ஒரு நாள் மட்டும் இருக்காது
. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் 11.06.2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளதால் மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது,சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலணி, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதிநகர், காமராஜ் நகர்,
4 மணி நேரம் தொடர் ஆய்வில் ஈடுபட்ட துரை வைகோ MP. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை
திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை பல்வேறு இடங்களின் ஆய்வு மேற்கொண்டார்.. முதல் இடமாக, காலை 8:00 மணிக்கு M.I.E.T முதல் ELCOT IT Park வரை உள்ள 100 அடி Link சாலையில் களஆய்வு மேற்கொண்டார்.. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த M.I.E.T முதல் ELCOT IT Park வரை சாலை அமைத்துத்தர
ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம் பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நூதன ஆலய அஷ்ட பந்தன பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு ஸ்தாபகர் தெய்வ இயக்குனர் மந்திரமூர்த்தி குருஜி கல்யாண ராம பட்டாச்சாரியார் சுவாமிகள்
சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்
திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும். மற்ற உணவகங்களை விட விலை இங்கு சற்று கூடுதலாக இருந்தால் கூட இவர்களின் சுவை என்பதை இன்றுவரை எந்த ஒரு உணவகத்தினாலும் ஈடு செய்ய இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருச்சிக்கு விஜயம் செய்யும் அனைவருமே தேர்ந்தெடுத்து
திருச்சியில் காணாமல் போன மூன்று நீர்ப்பாசன கால்வாய்கள் கண்டுபிடித்த வேளாண் பொறியியல் துறை.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட மூன்று நீர்ப்பாசன கால்வாய்களை வேளாண் பொறியியல் துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை 1 கோடி ரூபாய் செலவில் 222 கி.மீ நீளமுள்ள C மற்றும் D வகை வாய்க்கால்கள் தூர்வாருகிறது. தமிழ்நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக ஏரி குளங்களை தூர்வார வேண்டும். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
திருச்சி, ஜூன்.07-திருச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அய்யாக்கண்ணு பேசும்போது கூத்தைபார் கிராமத்தில் உள்ள கிளி வாய்க்கால் நடு குழுமி முற்றிலுமாக உடைந்து விட்டது.இது தொடர்பாக இந்த வருட சம்பா
பக்ரீத் வாழ்த்து: துரை வைகோ எம்பி
இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவர்களின் உண்மையான பக்தியை ஏற்று, ஒரு ஆட்டைப் பலியிட வழிவகுத்து, இந்த நிகழ்வை முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக்கினார். அந்த உன்னதமான தியாகத்தை போற்றி நினைவு கூர்ந்து, பக்ரீத் பெருநாளை கொண்டாடும்
உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது. உய்யக்கொண்டான் வாய்க்காலானது குளித்தலை வரையில் எந்தவித மாசும் ஏற்படாமல் தெளிவாக வரும் நிலையில், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் கழிவுநீர் கலக்க ஆரம்பித்து விடுகிறது. ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில்