தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது 1350 வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அவரது புகழை பறைசாற்றும் இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், டிடிவி.தினகரன் ஆகியோர் மணி மண்டபத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் கே என் நேரு
திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப்பொருட்காட்சியை இன்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். நாள்தோறும் சாதனைகளை நிகழ்த்தி வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டார். அப்போது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்
பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுடன் ஒரு நாள்
ஸ்ரீரங்கம் இரயில் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இன்று (22.05.2025) மதியம் ஒரு மணியளவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்திற்கு துரை வைகோ அவர்கள் வரும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதி மக்களும், கழகத் தோழர்களும் காத்திருந்தனர். முதலில் பொது மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்களை அழைத்து சந்தித்தார், கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார், அமைப்பு சார்ந்த தொகுதி மக்களோடு உரையாடல்களை மேற்கொண்டார், பரிந்துரை கடிதங்கள் வழங்கினார்..
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி
எனது திருச்சி தொகுதியில், அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்த விழாவில், இன்று (22.05.2025) காலை 9:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று உரையாற்றினேன். எனது உரையின் விவரம் பின்வருமாறு:இரயில்வே பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை மேம்படுத்துவதற்காக இரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அம்ரிட் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளது
தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் தொடரும் திரைப்படம்
‘துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” – என உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார்கள், ரஞ்சித் – சிப்பி தம்பதியர். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்குமேல் வசூலை வாரிக்குவித்து ‘தொடர்’ சாதனை செய்துகொண்டிருக்கும் ‘துடரும்’ படத்தின் தயாரிப்பாளர்கள்தான் ரஞ்சித்தும் அவரின் மனைவி நடிகை சிப்பியும். அதுவும்,
திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்
திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும் திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி அவர்களின் தலைமையில் செயல்படும் திருச்சி மாநகர காவல்துறை சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும் திருச்சி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவலருக்கு உற்ற தோழனாக இருப்பது என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் தான். திருச்சி
சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது- துரை வைகோ எம்பி அறிக்கை
சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது.இலங்கையை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், 2015 இல் தமிழக கியூ பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.’உபா’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில்
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார்.
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார். அனைவரும் பங்கேற்போம் வாரீர்…!பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவினையொட்டி, 23.05.2025 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களது தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களது முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
துரை வைகோ mp உடன் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் சந்திப்பு
தொகுதி மக்கள் நலன் சார்ந்த சந்திப்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியின் பிரதான பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை நோக்கி நகர்த்தி வருகிறோம். அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் TO பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் நெடுஞ்சாலை விளக்குகள் இல்லாததால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதனை