பணி நிரந்தரம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஏப்ரல் 10 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக
தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.
திருச்சி கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும்
ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்
09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் ரோந்து செய்தும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் சேர்ந்து அரியமங்கலம் சோதனை சாவடியில்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் ,
அறநிலையத்துறையின் அதிகாரியா ஆணவத்தின் அடையாளமா?
கடைசி நாளிலும் ராகினியின் கதக்களி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு பராய்த்துறை நாதர் சுவாமி, முனிவர்களின் செருக்கை பிச்சாடனாராக வந்து அடக்கினார் என்பது தல வரலாறு. இது கலியுகத்திலும் தற்பொழுது நடந்துள்ளது. திருப்பராய்த்துறையில். உண்மையாகிறது. செயல் அலுவலராக மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படும் அகிலாவை அனுப்பி, ராகினியின் அகந்தையை அடக்கி, தனக்கு பல வருடமாக சேவை செய்து வந்துள்ள மக்களுக்கு வாடகை ரசீது கிடைக்க செய்துள்ளார்
பத்திரிக்கை செய்தி 10.04.2025 ம் தேதி ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன் பிரதான உந்து குழாயை, தற்போது திருவறும்பூர் பகுதிகளுக்கு அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்தின் மூலம் செல்லும் பிரதான உந்து குழாய் உடன்
இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் முதலமைச்சர் ஆக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள். அன்பில் மகேஸ்
05/04/25திருச்சி மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ்கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது. மோகன் தலைமை தாங்கினார். 21 வது வட்டக் கழகச் செயலாளர் தர்கா முபாரக் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர்
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பத்து புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்த நீர் மோர் பந்தல்
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத்ஆர் ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.