தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவு சூரியனாய் வந்த கருணாநிதி பிறந்தநாள் – ஸ்டாலின் புகழாரம். தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள். ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திமுகவை வழிநடத்தியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை
உயர்நிலைப்பள்ளியாக எப்போது தரம் உயர்த்தப்படும் – பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெற்றோர் கேள்வி.
திருச்சி, ஸ்ரீரங்கம், ஜூன்.02 – ஸ்ரீரங்கம் 1வது வார்டு டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 6,7,8 வகுப்புகள் இயங்கி வருகிறது. 9,10 வகுப்புகள் உடன் எப்போது உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடை ஏற்படும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக சூழல் உள்ளதால் இவ்விகாரத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல் சூழலை புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது.
…செய்தி அறிக்கை… தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தண்டனை மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை மேலும் உறுதிசெய்யப்படுகிறது. இதே போல் இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் வாதிகளையும் விரைந்து கண்டறியுமாறு
BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய துணை முதல்வர்
. திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு காலகட்டத்தில் தன்னுடைய தந்தை மறைவெய்திய நிலையிலும் மனஉறுதியோடு தேர்வினை எதிர்கொண்டு 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல திருவெறும்பூர் – தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஷாலினியும் பொதுத்தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தவறாமல் தேர்வெழுதி சிறப்பான
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த, சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை, இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தொல். திருமாவளவன் எம்பி
Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி
அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம்
மணப்பாறை நகராட்சியில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து
தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது 1350 வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை
அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் கே என் நேரு
திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப்பொருட்காட்சியை இன்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். நாள்தோறும் சாதனைகளை நிகழ்த்தி வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டார். அப்போது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்