சுட்டெரிக்கும் வெய்யலில் தொடர் ஆய்வுபணிகளில் ஈடுபட்ட துரை வைகோ mp
துரை வைகோ எம்பி அவர்கள் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் இரயில்வே துறை சார்ந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்திட ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், இரயில்வே உயர் அதிகாரிகளையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, ஒப்புதல் பெறப்பட்டு, தொடங்கப்பட்ட மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகளை இன்று (20.06.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில், சஞ்சீவி நகரில் அமைய உள்ள இரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானப்
கட்சி நிர்வாகி தாயார் மரணம் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துரை வைகோ mp
சாதி, மத பேதமற்ற மனிதநேயத் தொண்டு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, தமது 84-வது வயதில் இயற்கை எய்திய வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் துரை வைகோ.. மதிமுகழக தேர்தல் பணிச் செயலாளரும், சென்னை மண்டல இணையதள அணி ஒருங்கிணைப்பாளருமான வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்கள் கடந்த 05.06.2025 அன்று தனது 84-வது
திருச்சி நீதிமன்றத்திற்கு வந்த மதிமுக நிர்வாகிகள்
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர். திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது,
திருச்சியி நீதிமன்றத்திற்கு வந்த மதிமுக நிர்வாகிகள்
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர். திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது,
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
திருச்சி, ஜூன் 17: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை சுபதம் அவென்யூ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் கழிவு நீர் வடிதல் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கழிவுநீர் வடிகால் அல்லித்துறை பஞ்சாயத்தில் ஆரம்பித்து
100 விழுக்காடு தேர்ச்சி தேவை ஆசிரியர்களை மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பள்ளி நிர்வாகம்
திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையில் அறநிலையத்துறை இடத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதால் பத்தாவது வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியர்களை அவர்களது தகுதியிலிருந்து கீழ் நிலைக்கு அனுப்பி, பாடம் நடத்த சொல்லி அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகிறது. தற்பொழுது வந்த 10வது தேர்வு முடிவில் 01மாணவன் கணித தேர்வில் தேர்ச்சி
துபாயில் மதிமுக நிர்வாகிகளை சந்தித்த துரை வைகோ எம்பி
துபாய் தொழில்துறையினர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த துரை வைகோ mp அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு நேற்று (15.06.2025) காலை 10:30 மணியளவில் அமீரக மறுமலர்ச்சி திமுக தோழர்கள் மற்றும் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் அனுதாபிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, வைகோ அவர்களின் உடல் நலம், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலம், துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற பேச்சுகள், தொகுதியில் ஆற்றும் பணிகள் குறித்து உரையாடினர், தங்களது
Dubai Future Summit” மாநாடு துரை வைகோ mp வாழ்த்து
அன்புடையீர் வணக்கம்! துபாயில் நடைபெறவுள்ள “Dubai Future Summit” என்ற மாநாடு, வேகமாக வளர்ந்து வரும், தொழில்நுட்பம் (Technology), புத்தொழிலாக்கம் (Startup), ரியல் எஸ்டேட்(Real Estate), மின் வணிகம் (e-commerce), நிதி (Finance), மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (Healthcare and Wellness) ஆகிய துறைகளில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை ஆராயும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதனை WIT Events நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. தொழிலதிபர்கள், துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்
அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் அராஜகப் போக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள். மின்சாரத்திற்காக 75 வயதில் பல படிகள் ஏறி இறங்கும் விதவை மூதாட்டி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமம் நந்தவனத்தில் கடந்த 15 வருடமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் செண்பகவல்லி என்ற 75 வயதான விதவை மூதாட்டி தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதில் வருந்தத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதே
15 ஆண்டுகால மக்களின் கோரிக்கை தீர்வு உருவாக்கி தந்த துரை வைகோ எம்பி
திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பதில்கொடுக்கும் விதமாக, கடந்த 15.04.2025 அன்று அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார் துரை வைகோ mp. அப்போது, சுமார் 25,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை



