திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை நேரில் கள ஆய்வு செய்த துரை வைகோ
திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை உள்ள தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதனால் தொடர் விபத்துகள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு கடந்த வாரம் கோரிக்கை வைத்தார் . மேலும் அது குறித்து தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் கொடுத்தார். அப்போது,
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச
தொகுதி மக்களின் தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் உடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர்
இன்று (19.05.2025) மாலை 4 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி தொகுதியில் உள்ள, வாசன் வேலி (Vasan Valley) குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோடு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதுகுறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். அத்துடன் மற்ற கோரிக்கைகளையும் வழங்கி அதுகுறித்த
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் – நெஞ்சு பொறுக்குதில்லையே.
எண்ணற்ற உயிர் தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15- அன்று அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு செய்தாலும் கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறப்புகளை கண்டு கொள்ளாமல் உரிய பாராமரிப்பின்றி விட்டு விடுவது இந்தியாவின் சுதந்திரத்தையும், சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிகளையும் அவமதிப்பு செய்து வருகிறோமோ என்ற மன வேதனை கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு தேங்காய் பண்ணு கூட சாப்பிட வசதியில்லாத நான்… – கண்ணீர் மல்கிய சூரி!
நான் எட்டாவது படிக்கும்போது, ரொம்ப வறுமை, வேற வழியில்லாம எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு திருப்பூர் வந்துட்டேன். அப்போ எனக்கு ஒரு நாளைக்குக் கிடைச்ச கூலி வெறும் 20 ரூபாய் தான். ஒரு வாரத்துக்கு உழைச்சா 140 ரூபாய் கிடைக்கும். அதுல பாதி வீட்டுக்கு அனுப்பிட்டு, மீதி காசுல என் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாம தவிச்சிருக்கேன்.அந்த சமயத்துல, திருப்பூர்ல கிடைக்கிற ஒரு சின்ன தேங்காய் பண்ணை சாப்பிடணும்னு எனக்கு எவ்வளோ
திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி
மே 19 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கோடைகால கனமழையின் காரணமாக கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும்
ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின்
திருச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்த தமிழக வெற்றி கழகத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக, வருடம் தோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட சார்பில் திருச்சி வயலூரில் உள்ள விஜய் மஹாலில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள்: திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை
● 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள, பச்சிளம் குழந்தைக்கு உயிர்காக்கும் பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி செய்யப்பட்டது● 11 நாட்களே ஆன, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பச்சிளம் குழந்தைக்கு 4×2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டு அதன் இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளம் சரிசெய்யப்பட்டது. திருச்சி, மே 15, 2025:தென் தமிழகத்தில்முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு
தள்ளாடும் தார் சாலைகள். அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தரசநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் முழுமையான சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக மோசமாக பல வருடங்களாக இந்தச் சாலை இப்படித்தான் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மழைக்காலங்களில் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



