இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிக்கையை சமர்பிக்கிறேன். இப்பகுதியில் பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
: நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த
மதிமுகவை சிதைக்கும் ‘ஒருவர்’ – துரை வைகோ குறிப்பிடுவது யாரை?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய
Neet தேர்வு மரணங்கள் – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL*, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் *ப.குமார்.BSc.,BL.Ex.MP*, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் *J.சீனிவாசன்* ஆகியோரின் அறிக்கை:-மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் *புரட்சித் தமிழர் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…”NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்”
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர
விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி.
பேசும் படம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நேற்று (14.04.2025) திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு மற்றும் கட்சியினர் வந்தனர். பல்வேறு பொதுநலக் கோரிக்கை மனுக்களை திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களிடம் வழங்கிட, ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால், இருந்த
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி மரியாதை
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், ஜெயம் ஸ்ரீதர்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்… திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சங்கம் ஓட்டல் வரையிலான சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வணிகப் பயன்பாட்டில் உள்ள கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைபடி *வணிக பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க இயலாது என தெளிவாக தெரிவித்து இருந்த
காலாவதியான பாம்பே பாதாம் பால் கண்டுகொள்ளுமா உணவு பாதுகாப்புத் துறை…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாம்பே பாதாம் மில்க் ஸ்டால் என்கிற கடையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கபட்டு பாட்டிலில் அடைத்து விற்கபடும் பால் சம்பந்தமான குளிர் பானங்களில் தயாரிக்கபட்ட தேதியோ, காலாவதி தேதியோ , விலையோ, எதுவும் அச்சிடாமலும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இக்கடையில் விற்கபடும் பாதாம்பால், ரோஸ்மில்க், பிஸ்தாபால் போன்றவற்றில் அதிகபடியான செயற்கை வாசனை பொருட்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய கலர்கள்



