New Trichy Times

Current Date and Time
Loading...

மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற பழமொழி தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதைப்போலவே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் எனக்கு வாக்களியுங்கள் என்று அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களை சந்திப்பதும் வெற்றி பெற்ற பிறகு மைக் வைத்து கூப்பிட்டால் கூட தொகுதி பக்கம் வராமல் இருப்பதும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

ஆனால் தன்னை பெரு வெற்றி பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் கண் துஞ்சாமல் சுய விருப்பு வெறுப்புகளை பாராமல் மக்கள் பணியே மகேசன் பணி எனவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று முன்வந்து நிற்பதும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமாக திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்கள் வெற்றி பெற்று ஒரு வருடத்திற்கு உள்ளாகவே மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே முதலாவதாக நின்று மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்தி செயல் புலியாக மக்கள் மனங்களை கவர்ந்து நிற்கின்றார்.

இந்த மாமனிதர் இன்று காலையில் திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிய பின்

ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மேஜர் சரவணன் அவர்களின் நினைவு ஸ்தூபிக்கு சென்று மேஜர் சரவணன் நினைவு தினத்தை போற்றி வீர வணக்கம் செய்தவர்

மின்னலாக புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அண்ட குளம் ஊராட்சி பொதுமக்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரத ஸ்டேட் வங்கி கிளை தங்கள் கிராமத்தில் அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த கிராமத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையம் அமைவதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செயல்படுத்தியவர் நாளை காலை நடைபெறும் அந்த வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு உறுதி அளித்து இருக்கின்றார்.

இதற்கு இடையில் திருச்சி மாவட்ட செய்தியாளர்கள் நேர்காணலுக்கு கோரிக்கை வைத்ததன் பெயரில் நாளை காலை 9 மணிக்கு நாடாளுமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களின் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த சூழலில் இடியென ஒரு துயர செய்தி அவருக்கு வந்தது.

ஆம் அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அவருடைய இரண்டாவது அத்தை இன்று மரணம் அடைந்து விட்டார் என்கின்ற துயரச் செய்தி தான் அது. ஒரு சாமானிய மனிதன் இறப்பு செய்தி கேட்ட அந்த நொடியே உடனடியாக விரைந்து சென்று இறந்தவரின் ஈம கிரியைகளில் கலந்து கொள்வார். ஆனால் மனிதர்களில் புனிதரான இந்த மாமனிதர் மக்கள் பணி இருக்கையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சுக துக்கங்கள் முக்கியமில்லை நான் உறுதியளித்த வங்கி வாடிக்கையாளர் சேவை மைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு அந்த மக்களின் சந்தோஷத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பையும் முடித்து விட்டு தான் என் இல்லத்திற்கு விரைவேன் என்று உறுதி அளித்திருக்கின்றார். இப்படிப்பட்ட மாமனிதரை பெறுவதற்கு இந்த திருச்சி மாநகரம் என்ன தவம் செய்ததோ! ஒரு ஊடகவியலாளராக இந்த மாமனிதரை அருகில் இருந்து பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இப்படி ஒரு அரசியல்வாதி இன்றைய இளைஞர்களுக்கு வர பிரசாதம் என்றே நான் கூறுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD