NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினர்,
கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை வைகோ MP யை நேரில் சந்தித்து,
சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி கோரினர்.

சுற்றுலா விசாவில் சென்றிருந்த காரணத்தாலும், அவர் வேலைக்காக அங்கு தங்கியிருந்த சூழ்நிலையாலும்,
சட்டப்பூர்வ நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருந்த இந்த விவகாரம், குடும்பத்தினருக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி, உடலை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான முயற்சிகளில் துரை வைகோ உடனடியாக ஈடுபட்டார்.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மதிமுக சகோதரர்களிடம் இந்த விஷயத்தை தொடர்ந்து கவனித்து உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும், கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அவர்களிடம் தெரிவித்து வந்தது.

கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளது என்ற தகவல், இன்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் அவர்களின் நேர்முக செயலாளர் திரு. பிபுதி நாத் பாண்டே மூலம் மின்னஞ்சல் வழியாக துரை வைகோ விற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த தகவலை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார் துரை வைகோ.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இன்று கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடல் பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்த மனிதாபிமான முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம், வெளிநாட்டிலுள்ள மதிமுக சகோதரர்கள்
மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ ்MP..

துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு துணையாக நிற்பது அவரது கடமை.என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

About Author
NTT தமிழ்

New Trichy Times இது சாமானியனின் உரிமைக்குரல்

View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Related Posts

POST MY ADD