
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கத்தின் பேரம் அமைப்பு திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டமானது திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் கள்ளிக்குடி தலைமை தாங்கினார் கொளத்தூர் த ரவி நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தால் சிறு வணிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விதிகளை கடமையாக்கி சிறு வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.
2. ராஜீவ் காந்தி மார்க்கெட் மற்றும் பெரிய கடை வீதி சின்ன கடை வீதி என் எஸ் பி ரோடு கள்ளத்தெரு ஆகிய பகுதிகளில் ரவுடிகள் மற்றும் சமூகவிரோதிகளால் மனிதர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது ஆகவே வழிப்பறிக் கொள்ளை மாமுல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மாநகர காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. திருச்சியில் தொன்மையான அடையாளங்களில் ஒன்றாகவும் நகரவாசிகளின் நம்பிக்கையாகவும் இருக்கும் காந்தி மார்க்கெட் ரூபாய் 60 கோடியில் புறநானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிகளை விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வந்து செய்யப்படாது இன்று நம்பிக்கையை ஏற்படுத்த தமிழக அரசு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
4. திருச்சி ஒருங்கிணைந்தபுதிய பஸ் முனையை வணிக வளாகம் மற்றும் பசுமை பூங்காவில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் உண்மையான வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அமைப்பின் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பெயர் பட்டியல்
மாவட்டத் துணைத் தலைவர்கள் தர்மராஜ், அக்னி அசோக், ஆறுமுகம், புகழேந்தி
மாவட்ட செயலாளர்
எஸ். கார்த்திக் என். கோபி, ஆர். இளங்கோவன், எம்.ராகுல், கே. பாரத்
மாவட்ட இணை செயலாளர்
சி. இந்திரன்
மாவட்ட சட்ட ஆலோசகர்
டி. முத்துசாமி , லெனின் பாண்டியன்
