
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை காலனி கொட்டப்பட்டு இந்திரா நகர் முத்து நகர் வெங்கடேஸ்வரா நகர் எம்ஜிஆர் நகர் மற்றும் பேன்சி நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு கோட்டம் கே சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கல்லூரி மாணவர்கள் தற்போது தேர்வு நடைபெறுகின்ற காரணத்தினால் மின் வேட்டை தவிர்க்கும் படி கோரிக்கை வைத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மின் வாரிய அதிகாரிகள் அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மின்வெட்டை ரது செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்களும் மாணவர்களும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.