New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி இதுவரை வெளி மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்று அவர்களும் ஏதோ கடமைக்காக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்துவிட்டு அளப்பரிய பணிகள் செய்தது போல தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்த வேலையில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக தொகுதி மக்களுக்கு அறிமுகமான திரு துரை வைகோ அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் தேர்தல் நேரத்தில் தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு திறம்பட செயல்படுத்தி வருகின்றார்.

அவருடைய ஒரு ஆண்டுகால மக்கள் பணியில் அவர் மக்களுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்களை நாம் இப்பொழுது காண்போம்.

எந்த நேரத்திலும் இவரை யார் வேண்டுமானாலும் எளிதாக சந்தித்து பேசிவிட முடியும் தங்களின் கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பிக்க முடியும். அவரும் உடனடியாக தன்னுடைய நிர்வாகிகளை கொண்டு அந்த விஷயத்தை தீர ஆராய்ந்து அந்த கோரிக்கையை நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றார். இவரை போன்ற ஒரு எளிய அரசியல்வாதியை பாராளுமன்ற உறுப்பினரை மக்கள் பணி செய்யும் மக்கள் சேவகரை காண்பது என்பது இப்பொழுதெல்லாம் அரிதிலும் அரிதாக உள்ளது.

திரு துரை வைகோ எம்பி அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்காக கொண்டு வந்துள்ள அரிய பணிகள் :

  1. திருச்சி மும்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான வழி போக்குவரத்து
  2. திருச்சி சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான வழி போக்குவரத்து
  3. திருச்சி யாழ்ப்பாணம் இண்டிகோ விமான போக்குவரத்து
  4. திருச்சி சத்திரத்தில் இருந்து பிஎச்இஎல் நுழைவு வாயில் வரை செல்லும் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
  5. திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் தீவிர பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
  6. ரயில்வே சம்பந்தப்பட்ட பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்று 25 கடிதங்களுக்கு மேலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
  7. திருச்சி விமான நிலையம் ஓடுதள பாதையில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  8. திருச்சி விமான நிலையத்தில் பணிகளை பயணிகளை இறக்கி விட ஆட்டோக்களுக்கு அனுமதி வாங்கித் தரப்பட்டது
  9. திருச்சி விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் கொரியர் சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  10. திருச்சி கே கே நகரை சேர்ந்த திரு புருஷோத்தமன் அவர்களின் மகன் நிவாஸ் தான் சானியா நாட்டில் திடீர் மாறடைப்பு ஏற்பட்ட இறந்த நிலையில் அவரது உடல் மற்றும் குவைத் நாட்டில் இறந்த பழனிச்சாமி ஆகிய இருவரது உடல்களும் திருச்சிக்கு கொண்டுவர உதவி செய்யப்பட்டது
  11. தனுஷ்கோடி மற்றும் மனோஜ் நாராயணசாமி மற்றும் ஏ ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் தற்காலிக பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டது
  12. திருச்சி எடமலை புது உரை சேர்ந்த கண்ணன் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவருக்கு பணி நிரந்தர ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  13. பிரதமரின் தேசிய நிவாரண நிதி மருத்துவ உதவி பெறுவதற்கு திருச்சி மாணவர்களுக்குள் மட்டும் இதுவரை 12க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது
  14. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு கீழ் வழங்கப்படும் இணைப்பு சக்கரம் பொருந்திய மூன்று சக்கர வாகனம் பெறுவதற்கு இதுவரை ஆறு நபர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  15. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 சுப்பிரமணியபுரம் நீர்த்தேக்கம் அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்க பதினாறு லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  16. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் நியாயவிடை கடை அமைக்க 99 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  17. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்க 15 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  18. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 54 வேடுவர் தெரு புது தெருவில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல் பணிக்கு 17 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  19. திருச்சிராப்பள்ளியில் மாநகராட்சி வார்டு எண் 5 திருவானைக்காவல் திருச்சி சென்னை ட்ரங்க் ரோடு சமயபுரம் பேருந்து நிறுத்தம் பயணியர் நிழற்குடை அமைக்க 15 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  20. திருச்சி பிஹெச்எல் நிறுவனத்தின் போட்டித் தன்மையை மற்றும் நிதி நிலையை நிலை தன்மையை பாதிக்கும் கொள்முதல் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  21. திருச்சி கே கே நகரில் உள்ள கிடங்கு தொடர்பான பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  22. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைத்திட உரிமை மீட்பு குழுவினருடன் இணைந்து மேற்படி சாலை விரிவாக்க பணிக்கு தொடர்ந்து முயற்சி செய்து வரப்படுகின்றது
  23. இஸ்லாமியர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக்கு இடம் கொடுத்தது
  24. திருச்சி திருவானைக்காவல் இணைக்கும் புறவழிச் சாலையில் சுரங்க பாதை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
  25. சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே பாலங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
  26. வந்தே பாரத் ரயில்களின் அத்திகளை தயாரிப்பதற்காகவும் பழுது பார்ப்பதற்காகவும் பொன்மலையில் பணிமனை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன
  27. பாரதப் பிரதமரின் கனவு திட்டமான அம்ரித் பாரத் திட்டத்தின் மூலமாக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ரயில் நிலையத்தை புதுப்பித்தது
  28. ஜி கார்னர் பகுதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மக்களின் பயன்பாட்டிற்கான சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன சொன்னதை மட்டுமல்ல சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதோடு எளிய மக்களின் கோரிக்கைகளையும் மாணவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளையும் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பிற்கான உதவிகளையும் முன்நின்று எந்த விதமான சமரசமும் இன்றி அரசியல் சாதி மத விருப்பு உணர்வு இன்றி மக்கள் பணியாக தொடர்ந்து செயலாற்றி வரும் துரை வைகோ அவர்களின் சீறிய பணிகள் என்றென்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு நிலைத்து இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD