
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.ஒரு இலட்சம் மதிப்பீட்டில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லாமல், இருசக்கர வாகனம் மட்டும் சென்று வருமாறு நடுவில் தடுப்பு அமைக்கபட்டு, கான்கிரீட் தரை அமைக்கப்பட்டது.னர். தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

ஆனால் அதே வேளையில் அந்த நுழைவு வாயிலுக்கு அருகிலேயே மாநகராட்சி குடிநீர் குழாய் உள்ளது அதன் அருகிலேயே சாக்கடையும் ஓடுகிறது.

அந்த கழிவு நீர் குடிநீரில் கலந்தால் பொதுமக்கள் நிலை என்னாவது என்பதை உணர்ந்து உடனடியாக அதையும் சரி செய்தார் என்றால் உண்மையாகவே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் பணி ஆற்றும் மனிதர் என போற்றப்படுவது நிச்சயம்.

